இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தாக்குதலுக்கு முன் எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்றை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அங்கமான அமாக் ஏஜென்சி வெளியிட்டுள்ளது.
உலகையே கடும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திய இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது.
ஏசு உயிர்த்தெழுந்த நாளென்று கிறிஸ்துவர்களால் கொண்டாடப் படும் ஈஸ்டர் பண்டிகை நாளில், இலங்கையில் சர்ச்சுகள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடர் குண்டுகள் வெடித்தன. இவற்றில் பாதிக்கப்பட்டு, 321 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் வாழ்க்கைக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து இரு தினங்கள் கழித்து, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தாங்கள் தான் இந்த குண்டு வெடிப்பை நடத்தியதாகக் கூறியது. அதற்கு உள்ளூர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் துணை கொண்டு அது நிகழ்த்தியிருக்கலாம் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், தற்கொலைப் படைத் தாகுதலைத் தொடுக்கும் முன்னதாக, தற்கொலைப் படை பயங்கரவாதிகள் தாங்கள் ஓர் உறுதி மொழி ஏற்றதாகவும், அந்த உறுதி மொழி குறித்த வீடியோ இதுதான் என்றும், கறுப்பு அங்கி அணிந்த படி, ஐஎஸ் பயங்கரவாதிகள் கூறும் வீடியோ ஒன்றை அமாக் ஏஜெண்சி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ…
[videopress rajpVGtU]