வரும் 2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன் மூலம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முழு நேர முதல் மத்திய பெண் நிதி அமைச்சர் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.
பட்ஜெட் ஆவணங்களை ஒரு சூட்கேஸ் பெட்டியில் எடுத்துச் செல்லும் நிதி அமைச்சர்கள் மத்தியில், நிர்மலா சீதாராமன், ஒரு பெண்ணுக்கே உரிய கலை அழகு மிளிர, பெட்டிக்கு பை சொல்லிவிட்டு, இந்திய அரசுச் சின்னம் பொறிக்கப் பட்ட ஒரு பையை கையில் எடுத்துக் கொண்டு வந்தார்.
#BudgetDay2019 17 – வது மக்களவையின் முதல் பட்ஜெட் இன்று முற்பகல் 11 மணி முதல் தாக்கல் செய்யப் பட்டு வருகிறது. மக்களவையில் தனது முதல் பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார் முதல் முழுநேர பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
அவர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தவை…
நாங்கள் முதலில் பதவியேற்றபோது, இந்தியா, 1.8 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இருந்தது. சில வருடங்களில் அதை 2.7 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றினோம். இன்னும் சில வருடங்களில் 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவோம்
“சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை வெற்றிபெற முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்”
மேக் இன் இந்தியா திட்டத்தின் இந்தியாவின் சொத்துக்களை அதிகரிக்கிறது அந்த திட்டம் ஊக்குவிக்கப்படும்
அந்நிய முதலீடு அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
இந்தியா இப்போது 6வது பெரிய பொருளாதார நாடு. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இது 11ஆவது இடத்தில் இருந்தது
கடந்த 5 ஆண்டுகளில் 657 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது
அனைவருக்கும் வீடு, கழிவறையை உறுதிப்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது
எரிபொருள் மாற்றாக பேட்டரி வாகனங்கள் உற்பத்தியை அரசு ஊக்குவிக்கும்
நீர்வழிப் போக்குவரத்து மூலம் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த திட்டம்
2018 – 30 ஆண்டுகளில் ரயில்வேயில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவை என்பதால் தனியார் பங்களிப்பு அவசியம்
மின்கட்டண வரையறையில் மறுசீரமைப்பு தேவை
சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் ரூ.1 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும்
இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டிலேயே 3 லட்சம் கோடி டாலராக வளர்ச்சி பெறும்
ஒரு நாடு ஒரு மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சம அளவில் மின்சார விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன
சாதாரண மக்களுக்காக பெரும் சீர்த்திருத்தங்களை அரசு மேற்கொண்டு உள்ளது
அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கபடும்
ரயில்வே துறையில் பயணியர் சரக்குப் போக்குவரத்தில் தனியார் பங்களிப்பு ஈடுபடுத்தப்படும்
தற்போது வீடு வாடகை சட்டங்கள் சீரமைக்கப்பட்டு மாற்றம் கொண்டு வரப்படும்
கார்ப்பரேட் கடன் சந்தை சீரமைப்புக்கு கண்காணிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும்
தன்னார்வ நிறுவனங்களை செபியின் பட்டியலிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
தன்னார்வ நிறுவனங்கள் நிதி ஆதாரங்களை திரட்டுவது வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும்
2018 – 19ம் நிதி ஆண்டில் அந்நிய முதலீட்டு வலுவான நிலையில் உள்ளது
விமானப் போக்குவரத்து மற்றும் ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க திட்டம்
அந்நிய நாடுகளின் செயற்கைக் கோள்களை செலுத்தும் அளவிற்கு விண்வெளி ஆய்வு வளர்ச்சி அடைந்துள்ளது
இஸ்ரோவின் வணிகரீதியான செயல்பாடுகளுக்கு புதிய அமைப்பு தொடங்கப்படும்
வங்கி முறைகேடுகள் தடுப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் மறைமுக வரிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது.
மின்கட்டண முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டியது அவசியம்.
சரக்குகளை நீர்வழிப் போக்குவரத்து மூலம் எடுத்துச் செல்வது ஊக்கப்படுத்தப்படும்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் முக்கியமான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது!
பாரத் மாலா திட்டம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளை இணைக்க உதவும்
300 கிலோ மீட்டருக்கு புதிய மெட்ரோ லைன் 2019-20 நிதி ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்படும்
ரயில், பஸ் என எல்லாவற்றுக்கும் ஒரே அட்டை அறிமுகப்படுத்தப்படும்