காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் அத்திவரதர் பெருமானின் தரிசனத்துக்காக, இன்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வந்திருந்தார்.
அவரது வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. அவரை ஆலயத்துக்கு வரவேற்ற அறநிலையத்துறை அதிகாரிகள், சிறப்பு வழியில் அழைத்துச் சென்று, அத்தி வரதர் தரிசனம் செய்வித்தனர்.
அவருக்கு கோயிலின் சார்பில் சிறப்பு மரியாதைகளும் செய்யப் பட்டன. துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு வந்து அத்திவரதர் தரிசனம் முடித்துச் சென்றது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவலாக எதிரொலித்தன.
[videopress YFCPRWyl]