ஹிந்து தர்மம் பல நூறு ஆண்டுகளாக பிற மதத் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. அதற்கு ஒரே காரணம்தான் உள்ளது. நம்மிடையே உள்ள “எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார்!” என்று விட்டேத்தியாக ஒதுங்கும் பழக்கம். அது இன்னும் நம்மை விட்டபாடில்லை. அதனால் நம் கடமையை மறந்தோம்! நித்திரையில் ஆழ்ந்தோம்! இன்னும் நித்திரையிலிருந்து மீளவில்லை! பலன்?
1947 இல் நாம் சாதித்தது அரசியல் சுதந்திரம் மட்டுமே! ஹிந்து தர்மத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை சுதந்திர இந்தியா எவ்விதத்திலும் நீக்கவில்லை. அதோடு இன்னும் ஆபத்தை அதிகரிப்பதற்கு வழிகாட்டுகிறது. பின் நாம் என்ன செய்யவேண்டியது என்ன?
1949 ஜனவரி 26ல் அரசியல் சாசனத்தை டாக்டர் அம்பேத்கரும் பிற சிறந்த மேதாவிகளும் சேர்ந்து எழுதினார்கள். அவர்கள் ஹிந்துக்கள், சீக்கியர், பௌத்தர், ஜைனர்… இவர்களை மட்டுமே பாரத தேச வாரிசுகளாக குறித்துள்ளார்கள். ராஜ்ய சபையில் பார்சிகள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் கூட இருந்த போதிலும் பாரதிய வாரிசு உரிமையை தெள்ளத் தெளிவாக அறிவித்தது நம் அரசியல் சாசனம்.
பாரத அரசியல் சாசனத்தில் இருபத்திரண்டு சித்திரப் படங்களை வரைவதற்கு அங்கீகரித்தார்கள். அந்த வரைபடங்கள் என்னவென்று சற்று பார்ப்போம்.
1.மொஹஞ்சதாரோ முத்திரை.
2. வேத ஆசிரமம், குருகுலம்.
3. இலங்கையில் அசுர சக்திகளின் மேல் ராமனின் விஜயம், சீதா தேவியோடு அயோத்தியில் பட்டாபிஷேகம்.
4.கீதோபதேசம்
5. புத்தபகவான்
6. மகாவீர பகவான்
7. புத்த மதம் பரவும் காட்சி.
8 குப்தர் காலக் கலைகள்
9. விக்ரமாதித்தனின் அரண்மனை
10. புராதன நாளந்தா பல்கலைக்கழகம்
11. நடராஜ விக்கிரகம்
12.ஒரிசா சிற்பக்கலை
13. மகாபலிபுரம் சிற்பங்களில் கங்கை உற்பத்தி காட்சி
14. மொகலாய சிற்பக்கலையில் அக்பர் படம்
15.சிவாஜி, குரு கோவிந்தர் படங்கள்
16.திப்பு சுல்தான், ராணிலட்சுமிபாய் படங்கள்
17. மகாத்மா காந்தி
18. பாரத சுதந்திர போராட்டத்தில் மக்கள்
19. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
20. இமயமலை காட்சிகள்
21.பாலைவன காட்சி
22. இந்துமகா சமுத்திரத்தில் கப்பல்.
இவற்றுள் எங்கும் கிறிஸ்தவத்தை சேர்ந்த பிரிட்டிஷாரின் குறிப்புகள் கிடையாது.
பாரத தேசத்தின் எதிர்காலம் பற்றி விவாதித்து முடிவெடுக்கும் பார்லிமென்ட் கட்டடம் எப்படி இருக்கிறது என்றும் அதில் ஹிந்துத்துவா எவ்வாறு உள்ளது என்றும் இப்போது பார்ப்போம்!
சபாபதி ஆசனத்தின் மேற்புறம், “தர்ம சக்ர ப்ரவர்த்தனாய’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. பாரதிய அரசியல் அமைப்பிடத்தின் பெயர் ‘தர்மம்!’
முதல் நுழைவாயிலில், ”லோக த்வார மபாவாம்ன பஸ்யேம வயந்த்வா” அதாவது “மக்களின் நலனுக்காக துவாரம் திறந்து உத்தமமான அரசாங்கத்தின் வழியைக் காட்டு!” என்று எழுதப்பட்டுள்ளது.
பிரதானமான சபையின் உள் வாயிலில், “அயம் நிஜ: பரோவேத்தி கணனா லகுசேதனாம்”, “உதார சரிதா நாந்து வசுதைவ குடும்பகம்” – “என்னுடையவர், பிறர் என்ற சுயநலம் வேண்டாம். அனைத்து ஜகத்தும் ஒரே குடும்பம்!”
முதல் லிஃப்ட் வாயிலின் மீது, “ந ஸா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா:, வ்ருத்தா: நதே யேன வதந்தி தர்மம், தர்ம: சனோயாத்ர ந சத்யமஸ்தி சத்யம் ந தத் யச்சலமப்யுபைதி!”
“பெரியவர்கள் அற்ற சபை சபையேயல்ல! தர்மத்தை அனுசரித்து பேசாதவர்கள் முதியவர்களே அல்ல! சத்தியம் இன்றி தர்மம் நிலைக்க இயலாது. எந்த சத்தியமானாலும் வஞ்சனையும் கபடமும் இல்லாமல் இருக்க வேண்டும்”.
இரண்டாவது லிஃப்டின் அருகில் எழுதியுள்ள வாசகத்தில், “சபையில் இருப்பவர்கள் தர்மத்தோடுதான் பேசவேண்டும். அசத்தியமும் அதர்மமும் பேசினால் பாவம் செய்தவர்கள் ஆவர்!” என்று உள்ளது.
இவை அனைத்தும் எதைக் காட்டுகின்றன? ஹிந்துத்துவம்… ஹிந்து தர்மத்தின் சிறப்பு… இவற்றையே!
பாரத அரசின் லட்சிய வாக்கியம் “சத்தியமேவ ஜெயதே!” என்பது. சுப்ரீம் கோர்ட் “யதோ தர்மஸ்ததோ ஜய:” என்ற வாசகத்தை மூச்சாகக் கொண்டுள்ளது.
ஆல் இண்டியா ரேடியோ “பஹுஜன ஹிதாய” என்ற வாசகத்தையும், நம் ராணுவம் “சேனா அஸ்மாகம் தர்மஹ” என்ற வாசகத்தையும் இலட்சியமாகப் பொறித்துக் கொண்டுள்ளன.
கடற்படை “சம்னோ வருணஹ” என்றும் விமானப்படை “நப: ஸ்ப்ருசம் த்வீபம்” என்றும் தம் லட்சியங்களாகப் பொறித்துள்ளன.
டில்லி யுனிவர்சிட்டி “நிஷ்டா த்ருதி சத்யம்” என்றும் எல்ஐசி, “யோக க்ஷேமம் வஹாம்யஹம்” என்றும் தம் கொள்கைகளாக எழுதிக்கொண்டுள்ளன. இவை அனைத்தும் ஹிந்துமத ஆதர்ச வாசகங்களே!
395 (ஆர்டிகில்கள்) ஷரத்துகள், 22 பாகங்கள், 12 (ஷெட்யூல்கள்) அட்டவணைகளோடு நம் அரசியல் சாசனம் விளங்குகிறது. பல்வேறுபட்ட மொழிகள், ஜாதிகள், இனங்கள், கலாச்சாரங்கள் உள்ளவர்களிடையே அற்புதமான ஹிந்துமத உள்ளம் போன்றது நிர்மலமான அரசியல் சாசனம்.
ஆனால் அதற்கு 42வது திருத்தம் என்ற பெயரில் இந்திரா காந்தி அரசு எமர்ஜென்சியின் போது பாரத தேச மக்களுக்கு தம் இதயங்களின் மீது தமக்கே சந்தேகம் ஏற்படும் விதமாக 1976ல் செக்யூலர் (சமயச்சார்பற்ற) என்ற சொல்லை வலுக்கட்டாயமாகத் திணித்து அரசியல் சாசனத்தின் பிடிப்பையும் கட்டுப்பாட்டையும் தளர்த்தியது.
உலக நாடுகளின் அழுத்தத்தாலோ அல்லது தன் சுயநலமான எண்ணங் களாலோ இந்திராகாந்தி செய்த செயலால் பாரத அரசியலமைப்பின் கௌரவத்திற்கு கிரஹணம் பீடித்தது.
மக்கள் நலனிற்காக அனைத்து வர்க்கங்களின் உரிமைகளையும் பொறுப்புகளையும் சில ஷரத்துகளின் கீழ் அளிக்கிறது அரசியல் அமைப்பு. பலவித வேறுபாடுகள் கொண்ட இந்தியர்களுக்கு அரசியல் சாசனம் அளித்த அடிப்படை உரிமைகளில் முக்கியமானவற்றைக் காண்போம்!
ஆர்டிகிள் 14, 15, 16, 17, 18 …சம உரிமை சட்டங்கள் மிக முக்கியமானவை. இந்த ஷரத்துகள் என்ன கூறுகின்றனவென்றால் பிறப்பின் அடிப்படையில் யாரானாலும் குலம் மதம் இனம் பாலினம் பாகுபாடுகள் பார்க்கக் கூடாது. ஆர்டிகிள் 25, 26, 27… செக்யூலர் தொடர்பானவை.
பாரத தேச அரசியல் சாசனம் அனைத்து மக்களுக்கும் சம உரிமை அளிக் கிறது. அவரவர் எண்ணம் போல எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். போதிக்கலாம். அதற்கான பிரசாரத்திற்கு முயற்சி செய்யலாம்.
தார்மீக வழியில் மக்கள் நலனுக்கான தன்னார்வ அமைப்புகளை ஏற்படுத் தலாம். ஆனால் அவற்றால் மக்களின் உடல் நலத்திற்கும் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மக்களின் மத தர்மங்களும் கேடு நேரக்கூடாது.
அரசு நடத்தும் அல்லது அரசின் உதவியோடு நடக்கும் கல்விக்கூடங்களில் மத நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. பிற மதங்களை மாணவர்களின் மீது திணிக்கும் செயல் குற்றமாக கருதப்படும். மக்களுக்காக அரசாங்கம் நடத்தும் பொருளாதார சமுதாய அரசியல் செயல்களில் மத, தார்மீக அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தடையாக இருக்கக்கூடாது.
பல்வேறு மேலை நாட்டு மதங்கள் கூட இங்கு வாழ்கின்றன. எனவே ஆரடிகில் 29, 30ன் கீழ் மொழி கலாச்சாரம் தொடர்பான மைனாரிட்டி களுக்கு அரசாங்க அமைப்புகளில் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
தம் மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு மைனாரிட்டி அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள உரிமை உண்டு. அவற்றில் ஏதாவது முறைகேடுகள் நடந்தால் அரசு தலையிடலாம்.
ஆனால் பாரத தேச அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளில் செக்யூலர் அமைப்பு என்ற முக்காட்டில் கிறிஸ்தவம் என்ன செய்கிறது? 1947 க்கு முன்பே வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மலைப் பிரதேசங்களில் அப்பாவி ஹரிஜனங்களிடையே சேவை, மருத்துவம் என்ற பெயரோடு புகுந்து அவர்களின் ஏழ்மையை பகடைக்காயாக உருட்டி அங்குள்ளவர்களை மதம் மாற்றியது.
மக்கள் தொகையில் அனைவரின் பெயர்களையும் கிறிஸ்தவர்களாக பதிவு செய்தது. கிராமம் கிராமமாக மக்கள் கிறிஸ்தவர்களாக பதிவு செய்யப் பட்டார்கள்.
நாட்டு எல்லை பிரதேசங்களான நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் அருணாசலப் பிரதேசம் அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் கிறிஸ்தவர் களின் ஆதிக்கம் அதிகரித்து நாட்டின் சமதர்மத்திற்கு ஆபத்து விளைந்தது. “பாரத தேசத்தை பைபிள் அரசாக மாற்றுவதே தம் இலக்கு!” என்று பகிரங்கமாகவே கிறிஸ்தவர்கள் இன்று அறிவிப்பு செய்கிறார்கள். பிரசங்கங்களில் கூச்சலிடுகிறார்கள்!
அரசியலை கட்டுப்படுத்தும் விதமாக அரசியல் ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் செய்து இப்போது ஒரேடியாக மதம் மாறிய கிறிஸ்தவர் களுக்கு ரிசர்வேஷன் கிடைக்கும் விதமாக அரசியல் சாசனத்தைக் கூட மாற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்து வருகிறார்கள்.
கோவில்களின் சுற்றுப்புறத்தில் பிற மத பிரச்சாரம் நடத்தக் கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால் கோவில் மணி ஓசை கூட கேட்க விடாமல் பிற மத பிரசாரங்களும் பிரசங்கங்களும் கேட்டு வருகின்றன.
பள்ளிகளில் மத பிரசாரத்திற்கு தடை உள்ளது என்று சட்டம் கூறுகையில் பெங்களூரில் ஒரு பள்ளியில் ஹிந்து மாணவிகள் ஹோலி கொண்டாடி னார்கள் என்று அவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் விதமாக அவமானப்படுத்தி உள்ளார்கள்.
ராக்கி கட்டி கொண்டார்கள் என்று கான்பூரில் மாணவர்களை மணிக் கணக்காக வெயிலில் நிறுத்தி வைத்தார்கள். பட்டாசு வெடித்தார்கள் என்றும் ஐயப்பா ஆடை அணிந்து வந்தார்கள் என்றும் விபூதி குங்குமம் இட்டுக் கொண்டார்கள் என்றும் மாணவர்களை துன்புறுத்தியுள்ளார்கள். இது போன்ற சட்டவிரோத சம்பவங்கள் நடக்கின்றன ஊடகங்களில் படிக்கிறோம்… பார்க்கிறோம் கூட!
யாரையும் பயமுறுத்தியோ ஆசை காட்டியோ மதம் மாற்றக் கூடாது என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது.
1968 ல் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு பைபிளில் உள்ள படைப்புக் கொள்கை பற்றி மாணவர்களுக்கு போதிப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று தெளிவாகக் கூறுகிறது.
“விஞ்ஞானக் கொள்கைகளும் பைபிளின் போதனைகளும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. பூமியின் படைப்பு, பூமியின் நகர்வு, வானவியல் பற்றிய விஞ்ஞானம் பைபிளில் தப்புத்தப்பாக உள்ளது” என்று நிரூபித்த கலிலியோ, புரூனோ, கோபர்நிக்கஸ் போன்ற விஞ்ஞானிகளைக் கொடூரமாக துன்புறுத்தி கொன்றார்கள் கிறிஸ்தவ அரசர்கள்.
ஒரு சர்ச் கட்ட வேண்டும் என்றால் பல நிபந்தனைகள் உள்ளன. கலெக்டரின் உத்தரவுப்படி எம்ஆர்ஓ மறு ஆய்வு செய்ய வேண்டும். உள்ளூர் மக்களின் அபிப்பிராயத்தை சேகரிக்க வேண்டும். அவர்களிடம் இருந்து ‘மறுப்பு இல்லை’ என்ற சான்றிதழ் பெற வேண்டும். அப்போதுதான் அது சட்டப்படி அனுமதி பெற்ற சர்ச் ஆகும். இல்லாவிட்டால் இடித்துப் போடலாம். எங்கு அக்கிரமாக சர்ச் கட்டப்பட்டாலும் கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது.
ஐபிசி 153 ஏ பிரிவு சட்டத்தின்படி கோவில்களுக்கு 100 கஜம் சுற்றளவில் பிற மதப் பிரச்சாரம் செய்வதோ சுவரில் பிற மத போஸ்டர் ஒட்டுவதோ ஒலிபெருக்கி சப்தத்தால் ஒலி மாசு ஏற்படுத்துவதோ குற்றம். ஐபிசி 153 பி பிரிவின் கீழ் அரசியல் சாசனத்தை அவமதித்தாலும் பாரதிய சமதர்மத்திற்கு பங்கம் விளைவிக்கும் விவகாரங்களில் ஈடுபட்டாலும் பாரதிய தத்துவத்தை அவமதித்தாலும் குற்றம்!
ஐபிசி 295 ஏ பிரிவின் கீழ் மக்களின் தார்மீக கருத்துக்கள், பூஜை, பிரார்த்தனை தலங்களை யாரும் களங்கம் செய்வதோ அவமதிப்பதோ குற்றம். அவர்களின் நம்பிக்கைகளையும் எண்ணங்களையும் கீழ்மைப்படுத்தும் செயல்களைச் செய்யக்கூடாது. விக்ரகங்களையோ நூலகங்களையோ அபவித்திரம் செய்ய வேண்டுமென்று மத வேற்றுமைகளைத் தூண்டும் மத பிரசாரகர்களை இந்த செக்ஷனின் கீழ் அரெஸ்ட் செய்து வழக்கு தொடரலாம்.
பாரத நாட்டில் பயணிப்பதற்கு வியாபார நிமித்தம் வந்துள்ளதாக கூறிக்கொண்டு டூரிஸ்ட் மற்றும் பிசினஸ் விசாக்களின் மீது வந்த மேல் நாட்டவர்கள், கிறிஸ்தவ மிஷனரிகளைச் சந்தித்து மதம் மாறியவர்களை கணக்கெடுப்பது, சுவார்த்தை சபைகளின் பெயரில் மக்களைத் தூண்டுவது, பிரசங்கிப்பது, துண்டுச் சீட்டுகளை கையில் வைத்துக் கொண்டு மக்களிடம் விளக்குவது போன்றவை எங்கு நடந்தாலும் காவல்துறையினரிடம் புகார் செய்ய வேண்டும்.
2019 பிப்ரவரி 6, 7 தேதிகளில் விஜயவாடாவில் நடக்க இருந்த பெரிய கிறிஸ்தவ பிரச்சார சபை ரத்து செய்யப்பட்டது. காரணம் என்னவென்றால் சைதன்யம் நிரம்பியவர்களாக மாறிவரும் ஹிந்துக்கள், மேல்நாட்டு விசாவில் வந்த சார்லஸ் என்பவர் மீது போலீசாரிடம் புகார் செய்தார்கள். டூரிஸ்ட் விசாவில் வந்து மதப் பிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றம்.
சிறு குழந்தைகளை விற்பது, அப்பாவி இளைஞர்களின் அழுகை ஓலங்கள், அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் மதம் மாறியவர்கள், ஆசைக்கும் அவகாசத்திற்கும் உட்பட்டு மதம் மாறிய மக்கள், அக்கிரம சர்ச் கட்டடங்கள், மேலை நாட்டுப் பண விநியோகம்…. போன்ற இவற்றுள் எது நடந்தாலும் நமக்கு உள்ள சட்டங்களில் துணையோடு எதிர்க்கும் உரிமை நமக்கு உள்ளது!
ஹிந்து தர்மத்தை பிற மத பிரச்சாரத்தால் துடைத்தெறிந்து விடவேண்டும் என்று நடந்து வரும் இந்த சதித் திட்டங்களை திருப்பி அடிக்க வேண்டுமென்றால்… நம் பிள்ளைகளை இத்தகைய திட்டமிட்ட சதியிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்றால் நம் அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று நாம் அறிய வேண்டியது அவசியம்.
ஹிந்துக்களே..! விழித்தெழுங்கள்!!
தெலுங்கில் – என்.விஜயபாரதி, வழக்கறிஞர்
தமிழில் – ராஜி ரகுநாதன்
(ருஷிபீடம் தெலுகு மாத பத்திரிக்கை ஆகஸ்ட் 2019)