February 11, 2025, 5:24 PM
30.4 C
Chennai

இந்திய நலன் காக்கும் முடிவெடுத்த மோடிக்கு இந்து மக்கள் கட்சி பாராட்டு !

இந்திய நலன் காக்கும் முடிவெடுத்த மோடிக்கு இந்து மக்கள் கட்சி பாராட்டு ! வாழ்த்துக்கள் ! தமிழ் திரு அர்ஜுன் சம்பத் அறிக்கை!

RCEP தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என்று தெரிவித்தார் பிரதமர் மோடி…

இந்தியா முன்வைத்த ஆலோசனை களுக்கு தீர்வு காட்டப் படவில்லை என்பதால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்து விட்டது என்று தாய்லாந்து பாங்காங் நகரில் நடைபெற்ற 16 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார்…

சீனாவின் தயாரிக்கப்படும் மலிவான வேளாண் தொழில்முறை பொருட்களை இந்திய சந்தையில் குவிக்க சீனா திட்டமிட்டது முறியடிக்கப்பட்டது…

காங்கிரஸ் ஆட்சியில் தான் மிகப்பெரிய தவறு இழைக்கப்பட்டது…
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தான் ஆசியான் கூட்டமைப்பு புருணே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகளுக்கு இந்தியாவில் 74% சந்தை வாய்ப்பை தடையின்றி வாரி வழங்கியுள்ளது…

ஆனால், இந்தியாவுக்கு 50% வாய்ப்புகளை மட்டும் அந்த நாடுகளில் கிடைத்தது…

சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்ட காங்கிரஸ் ஆட்சியில்…
2007 ம் ஆண்டு சீனாவுடன் தடையற்ற வர்த்தகம் குறித்து வாய்ப்பை ஆராய முன்வந்து ஒப்புக் கொண்டது…

2011-2012 ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், சீனாவுடன் இணைந்து RCEP ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டது…

இப்படி காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவால் RCEP நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருகிறது…

காங்கிரஸ் ஆட்சியின் தவறான முடிவால் தான் இதன் தாக்கம் உள்நாட்டு தொழில்துறையில் இப்போதும் நீடித்து வருகிறது…

இந்தியாவின் கோரிக்கைகள்…

  • சீனாவில் மற்றும் பிற நாடுகளிலும் இந்திய உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்த வாய்ப்புகள் தர வேண்டும்…
  • இந்தியாவில் உள்நாட்டு தொழிற்சாலைகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்…
  • தடையற்ற வர்த்தகம் என்று இந்தியாவில் பொருட்களை குவிக்க சீனாவிற்கு தராமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்…
  • RCEP ஒப்பந்தத்தில்…
    தடையற்ற வர்த்தகம் என்ற பெயரில் இந்திய சந்தையில் பிற நாடுகள் பொருட்களை குவிக்க இயலாத வகையில் பாதுகாப்பு நுட்ப ஒப்பந்தம் வேண்டும்…

இந்த கோரிக்கையை மற்றும் நிபந்தனைகளை ஏற்க மறுப்பதால் இந்திய RCEP ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்தார்…

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் RCEP ஒப்பந்தம் ஏற்க முடியாது என்று தெரிவித்தார் மோடி…

எந்த ஒரு நாடும் பொருட்களை குவித்தால் அதன் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் ஷரத்து சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் பிரதமர் மோடி…

RCEP ஒப்பந்தப்படி அனைத்து 16 உறுப்பினர் நாடுகளுக்கும் MNF-
Most Favoured Nation அந்தஸ்து தர முடியாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக மறுத்துள்ளார்…

இந்தியாவின் விவசாய உற்பத்தி பொருட்களை, சிறு, குறு, நடுத்தர உற்பத்தி தொழிற்சாலைகள் பாதுகாக்கும் வகையில் RCEP ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா திட்டவட்டமாக மறுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது…
சீனாவிற்கு பாடம் புகட்டி இந்திய நலன் காத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

  • அர்ஜுன் சம்பத் (தலைவர் இ. ம. க.)

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

Topics

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories