- Ads -
Home கட்டுரைகள் கோயில் துறையிலயே கோபுர சின்னத்தை தூக்கிய அரசு! என்ன செய்யப் போகிறார் அண்ணாமலை?!

கோயில் துறையிலயே கோபுர சின்னத்தை தூக்கிய அரசு! என்ன செய்யப் போகிறார் அண்ணாமலை?!

அறநிலையத்துறை தனது கோயில் ரசீதுகளில் மசூதி படம் லோகோ வைத்து, பழைய கோயில் கோபுர சின்னத்தை காணாமல் போகச் செய்திருப்பது

#image_title
#image_title

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா கட்டண விவகாரம் அநியாயத்துக்கு பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்ற சூழலில், அறநிலையத்துறை தனது கோயில் ரசீதுகளில் மசூதி படம் லோகோ வைத்து, பழைய கோயில் கோபுர சின்னத்தை காணாமல் போகச் செய்திருப்பது மேலும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்மையில், திண்டல் முருகன் கோயில் சூரசம்ஹார விழா அழைப்பிதழில் மசூதி முத்திரையும், இன்றைய தமிழக அரசு நிர்வாகத்துக்கு தொடர்பே இல்லாத கருணாநிதியின் 100வது பிறந்தநாள் முத்திரையும் அச்சடித்து வெளியிட்டுள்ளது சேகர்பாபுவின் அறநிலையத்துறை!

இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. தரிசன டிக்கெட்டுகள், கோயில் பூஜைக்கான ரசீதுகள் இவற்றில் மசூதி லோகோ இடம்பெற்றதால், இது என்ன ஹிந்து சமய அறநிலையத்துறையா இல்லை வேறெதுவுமா என்று மக்கள் கொதித்துப் போனார்கள். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நீதிமன்ற உத்தரவுகளைக் காரணம் காட்டி கோயில்கள் பலவற்றை இடித்துக் கொண்டு வரும் தமிழக மாநில திமுக., அரசு, தங்கள் கொள்கை நாத்திகம் என்பதையும், தாங்கள் இந்து மத சார்பற்ற அரசு என்றும் கூறிக் கொண்டு கோயில்களை மட்டும் குறிபார்த்து இடிப்பதை பலரும் எதிர்த்துக் குரல் எழுப்பியே வருகின்றனர்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அழைப்பிதழில் கோபுர சின்னத்தை நீக்கி விட்டு கலைஞர் நூற்றாண்டு விழா சின்னம் இடம்பெற்றிருப்பது, அதிகார துஷ்பிரயோகம் என்று இந்துமுன்னணி, மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கருத்து வெளியிட்டார்.

தமிழகம் ஆழ்வார்களும், நாயன்மார்களும் பிறந்த ஆன்மீக பூமி. தமிழகத்தில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்கள் வருங்கால சந்ததிகளுக்காக தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக வானுயர்ந்த ஆலயங்களை கட்டிவிட்டு சென்றார்கள்.அப்படி கட்டிச்சென்ற ஆலயங்கள் தமிழ் கலாச்சாரம் பண்பாடுகளை காத்து நிற்கிறது.

ALSO READ:  தேசிய இளைஞர் தின ஸ்பெஷல்: சுவாமிஜியைக் கண்டெடுத்த தமிழகம்!

அதனால் தான் பாரத தேசத்தில் எங்கும் இல்லா அளவிற்கு வானுயர்ந்த ஆலயம் நிறைந்த மண்ணாக தமிழகம் விளங்குகிறது. அதன்படியே தமிழகத்தின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தின் கோபுரம் நம் முன்னோர்களால் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரத்தை காத்து நிற்கும் ஆலயங்களின் கலை நயத்தையும் இன்னும் வெளிநாட்டினர் கூட வியந்து பார்க்கின்றனர் இப்படி உலக சிறப்புமிக்க நம் பண்பாட்டினை அழிக்கும் நோக்கத்தோடு தற்போதைய திராவிட மாடல் திமுக அரசு நமது கோபுரத்துடன் கூடிய தமிழக அரசு சின்னத்தை மாற்ற முயற்சித்து வருகிறது.

அதன் முதற்படியாக இந்து சமய அறநிலை துறையில் கோபுரத்துடன் கூடிய தமிழக சின்னத்தை அழித்துவிட்டு வேறு சினத்தை வைத்துள்ளனர். திட்டமிட்ட ரீதியில் தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை காத்து நிற்கும் ஆலயங்களின் சிறப்புகளை வருங்கால சந்ததிகளுக்கு கொண்டு செல்ல விடாமல் அதனை அளித்து மாற்றும் நோக்கத்தோடு செயல்படும் இந்து சமய அறநிலையத்துறைக்கும், திராவிட மாடல் திமுக அரசுக்கும் இந்து முன்னணி கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது

மேலும் ஈரோடு மாவட்டம் திண்டல் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா அழைப்பிதழ் ஒருபுறம் கும்பு வடிவ சின்னமும் மறுபுறம் கருணாநிதி நூற்றாண்டு விழா எம்பளம் பதிக்கப்பட்டு அழைப்பிதழ் அடிக்க பட்டுள்ளது கந்த சஷ்டி விழாவிற்கும் திரு கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கும் என்ன சம்பந்தம் ஏற்கனவே திமுக அரசின் அமைச்சர்கள் திமுக உதயநிதி ஸ்டாலின் அவர்களும் சேகபாபு அவர்களும் ஆ ராஜா அவர்களும் இந்து மதத்தையும் இந்துக்களின் நம்பிக்கையை விமர்சனம் செய்து பேசி வருகின்றனர் இந்துக்கள் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் திரு கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா எம்பலம் கோவில் அழைப்பில் அடிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. உடனடியாக தமிழக அரசு மீண்டும் கோவில் கோபுரத்துடன் கூடிய முத்திரை பதித்த அழைப்புகளை அடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கின்றது – என்று கருத்து வெளியிட்டார்.

ALSO READ:  அரசியல் சட்ட மேதை - பி.என். ராவ்... புகழ்பெறாத மாமனிதர்!

இவற்றின் மூலம், திமுக., நாத்திக அரசு கோயில்களைக் கொள்ளை அடிப்பதிலும், கொள்ளை அடித்த பணத்தை வாக்குக்கு லஞ்சமாகக் கொடுத்து வாக்குகள் பெற்று மோசடியாக ஆட்சிக்கு வந்து அமர்வதிலும் தாங்கள் நிபுணர்களே என்பதை மீண்டும் மீண்டும் மெய்ப்பித்துக் காட்டி வருகிறது!

இந்நிலையில், திருச்செந்தூர் கட்டண உயர்வு விவகாரத்துக்கு எதிராக இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டமும், அப்போது போலீஸார் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கி, 200க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்ததும் பெரும் அளவில் மக்களிடம் சென்றடைந்தது.

ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தைச் சமாளிக்க, கட்டண உயர்வு என்பது வதந்தி என்ற ரீதியில் அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல் சொல்ல, பதிலுக்கு இந்து முன்னணியினர், கட்டண ரசீதுகளை வெளியிட்டு, எது வதந்தி ? இதோ ஆதாரம் என்று முழங்கினார்கள்.

திருச்செந்தூரில் ஆயிரம் ரெண்டாயிரம் வசூலிக்கவில்லை வதந்திகளை நம்ப வேண்டாம் என சில 200ரூ அல்லக்கைகள் வதந்தி பரப்பி வருகிறது. காசுக்காக சொந்த மதத்தையும் தெய்வத்தையும் கோவிலையும் பாழ்படுத்துவதை நியாயப்படுத்தும் அந்த இழி பிறவிகளுக்காக இதோ ஆதாரம்
14.11.23 ல் விஸ்வரூப தரிசனத்திற்கு ரூ 2000/- வசூல்
14.11.23ல் அபிஷேக தரிசன கட்டணம் என்ற பெயரில் ரூ 3000/- வசூல் செய்யப்படுவற்கான ரசீது நகல். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்பது தெரியாமல் பதிவிடும் சில முட்டாள்களுக்காக… – என்று குறிப்பிட்டு, இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் சமூக வலைத்தளங்களில் பதிவுகளைச் செய்திருந்தார்.

இதன் பின்னர், திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பக்தர்கள் போராட்டம் நடத்தியதில், போலீஸ் தாக்குதலில் சிலர் காயமடைந்தனர். 200க்கும் மேற்பட்டோர் கைது ஆனதால் பரபரப்பு நிலவியது.

தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருச்செந்தூர் கோவில் அலுவலகம் முன்பு பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல் கோட்டச் செயலாளர் ஆறுமுகசாமி கோட்ட தலைவர் தங்கமனோகர் ஆகியோர் உட்பட இந்து முன்னணி தொண்டர்கள் முருக பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, ரூ.1000, ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்தக் கோரி கோஷம் எழுப்பினர்.

ALSO READ:  16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் செல்போனில் சமூகத் தளங்கள் பயன்படுத்த தடை! எங்கே தெரியுமா?

அப்போது, கூட்டத்தில் உள்ளே புகுந்த ஆத்தூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கினார். இதனால் போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருச்செந்தூர் கிழக்கு பிரகாரம் போர்க்களம் போல் காட்சி ஆனது. இந்த வீடியோ பதிவுகள் பொதுமக்களிடம் அதிகம் பரவியதால் முருக பக்தர்களிடம் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

அநியாயமாக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து அறநிலையத்துறை மற்றும் திமுக அரசுக்கு எதிராக பக்தர்கள் மண்ணைத் தூவி சாபம் விட்டுச் சென்றனர். என்றாலும், இந்தக் கட்டண விவகாரத்தில், நெறிமுறைகளை மீறி, ரசீது எதுவும் இல்லாமல், அதிகாரிகளே ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்தனர் என்று கூறப்படும் குற்றச் சாட்டுகளுக்கு அறநிலையத்துறை மறுப்பு தெரிவித்த போதும், நடந்த சம்பவங்களுக்கு வீடியோ பதிவுகள் சாட்சியாகின.

முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரமே, ஒரு கலாசாரச் சின்னமாக முன்னோர்களால் நிறுவப் பட்டு, அது தமிழக அரசின் இலச்சினையில் இடம்பெற்றுள்ளது. இதனைச் சொல்லி ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசிய பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை, சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசும் திமுக., ஆட்சியாளர்கள், அரசுச் சின்னத்திலேயே சனாதனம் இடம்பெற்றிருக்கிறதே, அதை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் வகையில், கோயில்களும் தெய்வமும் இடம்பெறவேண்டிய அறநிலையத்துறையின் இலச்சினையையே மாற்றி, கோயில் கோபுரத்தை அகற்றி, அதில் மசூதியை வைத்திருக்கிறது தமிழக அரசு என்று குறிப்பிட்டு, இப்போது அண்ணாமலை என்ன பதில் அளிக்கப் போகிறார் என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர் சமூக வலைத்தளங்களில்!

ஆமாம்! என்ன செய்யப் போகிறார் அண்ணாமலை!?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version