spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைமுஸ்லீம்கள் தமிழர்களா? தமிழர்கள் இல்லை என்பதற்கு ஆம்பூர் சாட்சி!

முஸ்லீம்கள் தமிழர்களா? தமிழர்கள் இல்லை என்பதற்கு ஆம்பூர் சாட்சி!

- Advertisement -

முஸ்லீம்கள் தமிழர்களா ? தமிழர்கள் இல்லை என்பதற்கு ஆம்பூர் சாட்சி …

“தமிழ் மொழி தேர்வு வேண்டாம்”
“உருது மொழியே வேண்டும்” ஆம்பூர் முஸ்லீம்கள் அடம் –  ஆர்ப்பாட்டம் போராட்டம் !!!

பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்திற்கு முக்கியத்துவும் அளிக்கும் வகையில் 2006ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் ஒன்று பிறப்பித்து அதில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இத்திட்டம் ஆண்டுதோறம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மொழி சிறுபான்மை பள்ளிகளில் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணைக்கு பின்னர் 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு அளித்து 2016ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் விருப்பமுள்ளவர்கள் தமிழிலும் மற்றவர்கள் அவரவர் தாய் மொழியிலே மொழி பாடத்துக்கான தேர்வு எழுதலாம் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து வரும் 14ம் தேதி 10ம் வகுப்பு தேர்வுகள் துவங்க உள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம், ஆம்பூர் மஜ்ஹருள் உலூம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகம் முன் மார்ச் 9 ந்தேதி திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

200 க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு வெளியே நின்றவர்கள், “தங்களுடைய தாய்மொழியான உருது மொழியில்”

பொதுத்தேர்வு எழுதவும், தமிழ் மொழித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், சம்பவ இடத்திக்கு வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தேர்வு நேரத்தில் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், இதுப்போன்ற போராட்டங்கள் உங்களை திசை திருப்பிவிடும்.

அதனால் போராட்டத்தை கைவிட்டு களைந்து செல்லுங்கள், கல்வித்துறையின் உயர் அதிகாரிகளிடம் உங்கள் கோரிக்கையை கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் தலைமையில் போலிஸார் போராட்டம் நடந்த இடத்தில் குவிந்திருந்தனர்.

இதனால் 3 மணி நேரம் வாணியம்பாடி பதட்டமாக இருந்து பின் இயல்பு நிலைக்கு திரும்பியது.

தமிழ் மொழியைக் காப்போம் தமிழகத்தை காப்போம் என்றெல்லாம் போராட்டம் நடத்தக் கூடிய தமிழ் வழி இயக்கங்கள் எல்லாம் தற்போது என்ன சொல்லப் போகிறார்கள்?

முஸ்லிம்கள் தமிழர்கள் என்று மேடைக்கு முன் ஒருமுறை பேசக்கூடிய தலைவர்கள் எல்லாம் என்ன சொல்லப் போகிறார்கள் ?

உலகப் பொதுமறை திருக்குறள் என்று தமிழர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இஸ்லாமியர்கள் உலகப் பொதுமறை திருக்குர்ஆன் மட்டுமே என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .

இப்பொழுதாவது சொல்லுங்கள் முஸ்லிம்கள் தமிழர்களா ?

தமிழ் மொழி காப்போம் என்று தமிழ் மொழி கல்வி தேவை என்று கிராமசபை கூட்டம் நடத்தும்
திரு ஸ்டாலின் அவர்களே இந்த ஆம்பூர் பள்ளிக்கூட முன்பாக உங்கள் உடன் பிறப்புகள் தமிழைக் காக்க போராட்டம் நடத்துவார்களா?

அன்னை தமிழகத்தில் தமிழ்மொழி வேண்டாம்  உருது மொழி வேண்டும் என்று அராஜக போராட்டம் நடத்தும் இந்த யோக்கியதை என்ன சொல்வது?

நாம் தமிழர் தமிழே பேச்சு தமிழே மூச்சு என்று கையை உயர்த்தி பேசக்கூடிய நாம் தமிழர் சீமான் அவர்களே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

தமிழர்கள் சிறுபான்மை ஆகிவிட்டால் தமிழ் மெல்லச் சாகும் என்பதற்கு இந்த ஆம்பூர் உதாரணம்.

இதை தமிழர்களும் தமிழகம் உணர்ந்து, தமிழைக் காக்க, தமிழர்களை காக்க தமிழகத்தை காக்க, ஓரணியில் திரள வேண்டும்.

இராம. இரவிக்குமார் (இந்து தேசியவாதி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe