― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைசிக்கலில் ஷோபா டே! காட்டிக் கொடுத்த பாகிஸ்தான் முன்னாள் தூதர்!

சிக்கலில் ஷோபா டே! காட்டிக் கொடுத்த பாகிஸ்தான் முன்னாள் தூதர்!

- Advertisement -

shobade

71 வயதில் ஆபாச கதை எழுதினோமா, காசு வாங்கினோமா, மும்பை தெருவில் காரில் படுத்து போஸ் கொடுத்து அதை ட்விட்டரில் போட்டு வைரலாக்கினோமா என்று இல்லாமல்… இப்போது டென்ஷனில் ஷோபா டே!

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ-யிடம் பணம் வாங்கிக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக செயல்படும் இந்தியர்கள் பட்டியலில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், முற்போக்குகள், ஊடகவியலாளர்கள் என 400க்கும் மேற்பட்டோர் அடக்கம்… அந்த பட்டியலில் ஒருவர் இந்த 71 வயது ஷோபா டே என்னும் ஆபாச எழுத்தாளினி.

“காஷ்மீரின் புர்ஹன் வானி என்ற பயங்கரவாதியை ஆதரித்து இவளை டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் கட்டுரை எழுத வைத்தது நான் தான்” என்று பாகிஸ்தானின் முன்னாள் இந்திய தூதர் – இந்தியா விரோதி – அப்துல் பாசித் நேற்று போட்டுடைத்ததை அடுத்து, “எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவனை ஒரே ஒரு முறைதான் இதுவரை சந்தித்திருக்கிறேன். நான் ஒரு தேசப்பற்றுள்ள இந்திய பிரஜை” என்று அறிக்கை விட்டிருக்கிறது ஷோபா டே.

“நேற்று பக்ரீதுக்கு அப்துல் பாசித் ஷோபா டே-வை பலி கடா ஆக்கியிருக்கிறார்” என்பது பலரின் கருத்து. அப்துல் பாசித்தின் விமரிசனம் தற்செயலானதில்லை – கணக்கிடப்பட்ட ஒன்று.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் பற்றி அவதூறு பரப்பி சர்வதேச அரங்கில் ஆதரவு திரட்ட, இந்திய கைக்கூலி ஊடகங்களை உதவிக்கு அழைத்துள்ளது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.

தற்சமயம் வந்திருக்கும் NIA, UAPA சட்டங்களாலும், எடுத்த காரியத்தை முடிக்கும் மோடி தலைமையாலும் இந்திய கைக்கூலிகளுக்கு தயக்கம்.

“எங்கள் கட்டளைக்கு கீழ்படியவில்லை என்றால் ஷோபா டே-க்கு நடந்த கதிதான் உங்களுக்கும்” என்று மிரட்டவே இந்த பக்ரீத் பலி!

பிபிசி, அல் ஜசீரா என பல சர்வதேச ஊடகங்களில் புகுந்திருக்கும் பாக் ஐ.எஸ்.ஐ ஆட்கள் காஷ்மீர் விவகாரத்தை திரித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

இந்திய அரசு அந்த செய்திகளை மறுக்க, பிபிசியும் அல் ஜசீராவும், “எங்கள் செய்தி உண்மையானதே” என்று அரசிடம் பதிலளித்தனர். ஊடக சுதந்தரம்!

என்றாலும், “உங்கள் செய்தி உண்மையானதென்றால், நீங்கள் பகிர்ந்த வீடியோக்களின் ஒரிஜினல் வீடியோக்களை எங்களிடம் சமர்ப்பிக்கவும்” என்று அரசு கேட்டிருக்கிறது.

(ஊடகத்துக்கு அதீத சுதந்திரம் தரும் அரசியலமைப்பு, அதே ஊடகத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க அரசுக்கு உரிமை தந்திருக்கிறது.)

பிபிசியும் அல் ஜசீராவும் இதுவரை அரசுக்கு பதிலளிக்கவில்லை. ஆதாரம் தர வாய்ப்பில்லை – ஏனென்றால் அவர்கள் பகிர்ந்த வீடியோக்கள் பிற நிகழ்ச்சிகளோடு சம்பந்தப்பட்டவை.

ஆதாரம் தரவில்லை என்றால் அவை தடை செய்யப்பட வாய்ப்பு.

ஆரம்பத்தில் போலி செய்தி வெளியிட்ட என்.டி.டி.வி உள்ளிட்ட உள்ளூர் ஊடகங்கள் இப்போது, “வெளிநாட்டு ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு, நம்மை சும்மா விடுமா?” என்ற பயத்தில் ( மற்றும் NIA, UAPA பயத்தால்) இன்னும் எச்சரிக்கை காட்டுகின்றன.

பிபிசி – அல் ஜசீரா என வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியா பற்றி – குறிப்பாக காஷ்மீர் பற்றி – திரித்து செய்தி வெளியிடுவது இது முதல் முறையில்லை. ஆனால் “ஆதாரம் கொடு” என்று இந்தியா கேட்பது இதுவே முதல் முறை.

அடுத்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாக் ஐ.எஸ்.ஐ நபர்கள் போலி செய்தி பரப்பியதை அடுத்து அவற்றை முடக்க வைத்துள்ளது அரசு. இம்மாதிரி நடவடிக்கைகள் மோடி அரசு எடுப்பது இதுவே முதல் முறை.

பயங்கரவாத தாக்குதலால் பாதித்திருந்த ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை (பிரிவு 370) நீக்கிய ஆகஸ்ட் 5 முதல் ஒரு முறை கூட துப்பாக்கி சூடு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தொலைக்காட்சி விவாதங்களில், “நமக்கு ஆதரவாக அருந்ததி ராய், மமதா பானர்ஜி, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி எல்லாம் இருக்கின்றன. அவர்களை பயன்படுத்தி நம் காரியத்தை சாதிப்போம்” என்று வெளிப்படையாக பேசுகிறார்கள் (வீடியோ கமெண்டில்).

என்றாலும், நம் நாட்டு மூடர்கள் இந்த ராய் – பானர்ஜி – காந்தி – யெச்சுரி – டேனியல் ராஜா – ஸ்டாலின் பின்னே போகிறார்கள் என்பது கொடுமை.

அப்துல் பாசித் மற்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் காட்டிக் கொடுக்கும் இந்திய விரோதிகள் மீது – குறைந்த பட்சம் ஷோபா டே மீது – இந்திய அரசு விசாரணையை தொடங்கினால் அருமையாக இருக்கும். செய்வீர்களா மோடி ஜி???

– இதே புர்ஹன் வானியை “ஹிஸ்புல் கமாண்டர் மற்றும் தலைமை ஆசிரியரின் மகன்” என்று பர்க்கா தத் மழுப்பியது நினைவிருக்கலாம்… இதே பர்க்கா, “காஷ்மீர பண்டிட்டுகள் அரசின் அத்தனை வேலைகளை எடுத்துக் கொண்டதால் கோபமடைந்த அமைதிமார்க்கத்தினர் அவர்களை விரட்டியடித்தனர்” என்று காஷ்மீர பண்டிட்டுகள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தியவள். பர்க்கா, சேகர் குப்தா, ராஜ்தீப் சார்தேசாய், பிரசாந்த் பூஷன், இந்திரா ஜெய்சிங், பாலிவுட், கவிதா கிருஷ்ணன், அருணா ராய், தி ஹிண்டு ஊடகவியலாளர்கள் என பலரும் இப்போது நடுக்கத்தில் இருக்க வாய்ப்பு….

>>> 370ஐ தூக்கியதும் என்.டி.டி.வியின் பிரனாய் ஜேம்ஸ் ராயும் அவர் மனைவியும் நாட்டை விட்டு ஓட முயற்சித்ததும், விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டதும் கவனத்தில் கொள்க. அதற்கு பிறகு எவரும் ஓடத் துணியவில்லை <<<<

– இவர்கள் தவிர, பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்று வரும் மணி ஐயர், சுதீந்திரா குல்கர்னி, அருந்ததி ராய் போன்றோருக்கும் கெட்ட காலம் இனி.

– 71 வயதில் ஆபாச கதை எழுதினோமா, காசு வாங்கினோமா, மும்பை தெருவில் காரில் படுத்து போஸ் கொடுத்து அதை ட்விட்டரில் போட்டு வைரலாக்கினோமா என்று இல்லாமல்… இப்போது டென்ஷனில் ஷோபா டே. அடுத்த பலி கடா யார் என்பதை அப்துல் பாசித் விரைவில் அறிவிப்பான் என்று எதிர்பார்ப்போம்!

August 13, 2019 – Soft porn writer Shobhaa De calls herself “patriotic Indian” after writing about “plebiscite in Kashmir”, rejects Abdul Basit’s claims – Opindia News

July 17, 2016 – Burhan Wani is dead but he’ll live on till we find out what Kashmir really wants

Aug 12, 2019 – #WATCH Columnist Shobhaa De responds to claims by Former Pakistan High Commissioner to India, Abdul Basit, that he managed to influence her writings on Kashmir

Aug 11, 2019 – “Kai Hindustan ke log aapke (Pakistan) saath sympathizer bhi hain. Arundhati Roy hai, Mamta Banerji hai, Congress party hai, Communist Party……Saare Modi ke saath nahi hain.”

Jul 8, 2016 – Breaking: Burhan Wani hizbul commander, son of school headmaster who used social media as weapon of war, killed in Anantag. BIG STORY

Aug 12, 2019 – Government contacts Al Jazeera and BBC for their ‘Fabricated’ video on Kashmir. Home ministry officials said they are awaiting a response from the foreign media outlets but so far they have not been able to produce videos

Aug 13, 2019 – Twitter told to take down handles spreading fake news about Kashmir Valley According to officials, suspension of Twitter handles was taken up by the Ministry of Electronics and Information Technology.

11 AUG 2019 – Not a single bullet fired in last 6 days in J&K: Home Ministry denies violence reports

 – செல்வம் நாயகம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version