இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிகொண்ட தனது குட்டியை மீட்க போராடுகின்ற தாய் குரங்கு வைரலாகும் வீடியோ காட்சிகள்.
இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிகொண்ட தனது குட்டியை மீட்க போராடும் தாய் குரங்கின் வீடியோ பார்வையாளர்களின் இதையத்தை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதில், ஒரு குட்டி குரங்கு ஒரு குறுகிய இடைவெளியில் சிக்கி, அதிலிருந்து வெளியே வர எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறது. தாய்குரங்கு தன் குட்டி வெளியேற தவிப்பதைக் கண்டவுடன் அதன் கை.முகம் எல்லாம் பிடித்து வெளியேற்ற முயற்சிக்கிறது.
இன்னும் ஒரு பெரிய குரங்கும் ஒரு குட்டி குரங்கும் வந்து உதவி புரிகிறது அதன்பின் அந்த குட்டி வெளி எடுக்கப்படுகிறது. காட்டுக்குள் அலைந்து திரிவதற்கு முன்பு அதைக் கட்டிக்கொள்ளும் தாய் குரங்கும் நெகிழவைக்கும் காட்சியாக அமைந்துள்ளது. ஒரு விலங்கு ஆர்வலர் ‘காட்டு விலங்கு சேனல்’ பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.