வாயில் நீர் வடிகிறதா?
சிலர் தூங்கும் பொழுது வாயில் நீர் வடிந்து தலையணை நனைந்து விடும். இவர்கள் படிகாரத்தை நீரில் கரைத்து அடிக்கடி வாய் கொப்பளித்து வர நீர் வடிவது நிற்கும்.
வாத நோய் தீர…
அத்திக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும். அத்திக் காயுடன் பச்சை பருப்பையும் சேர்த்து சமைத்துச் சாப்பிட வாத நோய், மேக நோய்களை குணமாக்குவதுடன் இரத்தத்தையும் சுத்திபடுத்தும்.
யானைப் பால் குடிக்க வாத நோய்கள் குணமாகும்.
வாத நோய் உள்ளவர்கள் சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுண்டைக்காய் மார்புச் சளியை நீக்குகிறது. கபத்தைப் போக்குகிறது வயிற்றிலுள்ள கிருமிகளை நாசம் செய்ய வல்லது.
விக்கலா?
உடல் பலவீனத்தால் ஏற்படும் விக்கலுக்கு ஒரு பங்கு ஆளி விதைத் தூளை 8 பங்கு நீரில் ஊற வைத்தோ அல்லது கொதிக்க வைத்தோ ஓர் அவுன்ஸ் வீதம் உள்ளுக்குக் கொடுத்து வந்தால் ஓரிரு தினங்களில் நல்ல பலன் கிடைக்கிறது.
ஆளிவிதை இளமையில் முதுமை எய்தியவர்களுக்கும் ஆண்
தன்மையை இழந்து விட்டவர்களுக்கும் அதி மோகத்தால் உடல் மெலிந்தவர்களுக்கும் மறுவாழ்வு அளிக்கக்கூடிய வித்தாகும்.
தொடர்ச்சியான விக்கல் ஏற்பட்டால் பாதிரப் பூவில் சாறெடுத்து அதில் சுத்தமான தேன் கலந்து சாப்பிட விக்கல் நின்றுவிடும். பனை ஓலையைச் சுட்டுக் கரியாக்கித் தேனில் குழைத்துச் சாப்பிட
விக்கல், வாந்தி ஆகியவை நீங்கும்.
வெள்ளாட்டுப் பாலில் இஞ்சி சாறு கலந்து சாப்பிட்டு வர விக்கல் தொந்தரவு அடியோடு நின்றுவிடும்.
விரை வாதமா?
- விரை வாதம் (Hemla) பொல்லாத நோய். உயிரையே பிழிந் தெடுக்கும். கரு நொச்சி வேர். ஆமணக்கு வேர், சிறுகுறிஞ்சி வேர் முதலிய வற்றை சம அளவு எடுத்து தட்டிப் போட்டுக் சுண்டக் கஷாயம் வைத்து அதில் சிறிது விளக்கெண்ணெயும் சேர்த்து சாப்பிட்டு வர சரியாகிவிடும்.
விஷ பேதி நிற்க…
கரி மஞ்சள் 300 கிராம் எடுத்து இடித்து எட்டு லிட்டர் நீர் விட்டு நாலு லிட்டர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி உள்ளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்க விஷபேதி நிற்கும்.