spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாகல்யாணமான ஒரே வாரத்தில்... கணவனுக்கு ‘மோரில்’ விஷம் கொடுத்த ‘தர்ம பத்தினி’!

கல்யாணமான ஒரே வாரத்தில்… கணவனுக்கு ‘மோரில்’ விஷம் கொடுத்த ‘தர்ம பத்தினி’!

- Advertisement -

கணவனுக்கு மோரில் விஷம் கலந்து கொடுத்த புதுமணப் பெண் குறித்த பரபரப்பு இப்போது ஆந்திர மாநிலத்தை ஆட்டிப் படைக்கிறது!

நூறாண்டு வாழவேண்டிய மண வாழ்க்கையை 7 நாட்களில் முடிக்க நினைத்தாள் அந்த இளம் மனைவி.

கர்னூல் மாவட்டம் ‘மதனந்தபுர’த்தைச் சேர்ந்த நாகமணிக்கும், ‘துக்கலி’ மண்டலம் ‘ஜொன்னகிரி’ யைச் சேர்ந்த லிங்கமய்யா வுக்கும் திருமணம் நடந்தது. பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக இந்த திருமணம் நடந்துள்ளதாகக் கூறப் படுகிறது.

மணமாகி ஒரே வாரத்திற்குள் நேற்று திங்கள் கிழமை அன்று மோரில் விஷம் கலந்து கொடுத்து கணவரைக் கொல்ல முடிவு செய்தாள் நாகமணி. அதன்படியே செய்தாள்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த லிங்கமய்யாவைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ‘குத்தி’ அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்! சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு எடுத்து வந்ததால் லிங்கமய்யா உயிர் பிழைத்தார்.

திருமணத்திற்கு முன்பே அந்தப் பெண் வேறு ஒருவரை காதலித்த விவரம் தற்போது தெரியவந்துள்ளது. முதல் நாள் இரவு லிங்கமய்யாவோடு நாகமணி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மறுநாள் இவ்வாறு மோரில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்…

போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe