இத்தனை வினோதமாக எங்காவது திருடுவார்களா? குறுக்கு வழியில் பொருளீட்ட முயன்ற திருட்டுக் கூட்டத்தை சித்தூர் மாவட்ட போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.
சினிமாத்தனமாக ரூபாய் 47 லட்சம் மதிப்புள்ள பருத்தித் துணி பண்டல்களை திருடிய 4 பேரை கைது செய்தனர் . இந்த வழக்கில் கர்நாடகாவைச் சேர்ந்த நாகேந்திர ராவு, மல்லிகார்ஜுன், சசிகுமார், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப் பட்டனர். அவர்கள் திருடிய துணிகளோடு கூட டயோட்டா கார், கன்டைனர் ஆகியவற்றை கைப்பற்றினர்.
குண்டூர் மாவட்டம் சந்தோல் அருகிலுள்ள என்எஸ்எல் டெக்ஸ்டைல்ஸுக்கு சொந்தமான ரூ 47 லட்சம் மதிப்புள்ள 295 காட்டன் ரோல்களோடு கன்டைனர் பெங்களூருக்கு கிளம்பியது. கங்கவரம் மண்டலம் அருகில் உள்ள மேம்பாலம் அருகில் வண்டியில் கோளாறு காரணமாக கன்டைனர் நின்றுவிட்டது.
அந்த செய்தியை டிரைவர் முதலாளிக்கு தெரிவித்தார். அதற்கு முன் அந்த கம்பனியில் வேலை செய்த நாகேந்திரராவு இந்த விஷயத்தை அறிந்து கொண்டு தன் மூன்று தோழர்களோடு கன்டைனர் நின்ற இடத்தை சென்றடைந்தார்.
டிரைவருக்கு மது ஊற்றிக் கொடுத்து அவரை மயக்கத்தில் ஆழ்த்தி விட்டு வேறு ஒரு வாகனத்தில் காட்டன் ரோல்களை லோடு செய்து தப்பித்து விட்டனர். அவற்றை பெங்களூரில் பாதி விலைக்கு விற்றனர்.
கன்டைனர் முதலாளி நாராயணா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து நால்வரையும் கைது செய்தனர். அவர்கள் இதற்கு முன்பே பல குற்றங்களில் ஈடுபட்டிருந்ததை போலீசார் அடையாளம் கண்டனர்.