நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று கூறினார் இஸ்ரோ தலைவர் சிவன்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ சிவன், சந்திரயான்-3 திட்டம் நிச்சயம் உண்டு; செயல்படுத்தப்படும் முறை குறித்து பேசிவருகிறோம்; இன்னும் முடிவாகவில்லை.
நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தற்போதைக்கு இல்லை. சந்திரயான்-2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது… என்று கூறினார்.
மேலும், அதிநவீன செயற்கைகோள் இன்று அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.