ஜோத்பூர்: ஒரு வர்த்தகரிடம் இருந்து லஞ்சம் பெற முயன்ற ஜோத்பூர் வருமான வரித் துறை தலைமை ஆணையர் பி.கே.சர்மா, வருமான வரித் துறை அதிகாரி சைலேந்திர பண்டாரி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். ஒரு வர்த்தகரிடம் ரூ. 15 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, ஒரு ஜுவல்லரி ஷோருமில் வைத்து, சைலேந்திர பண்டாரியை கையும் களவுமாகக் கைது செய்தது சிபிஐ. அப்போது அவர், தான் ஒரு இடைத் தரகர் என்றும், வருமான வரித் துறை தலைமை ஆணையர் பவன் குமார் சர்மாவுக்காகத்தான் இதனைப் பெற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தார். இதை அடுத்து, சிபிஐ பிகே சர்மாவையும் அந்த ஜூவல்லரி ஷோரூமுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியது. பின்னர் அவர் தங்கியிருந்த ஐ.டி. விருந்தினர் இல்லம், பண்டாரியின் வீடுகளில் சீல் வைக்கப்பட்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித் துறை அதிகாரிகள் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari