புது தில்லி: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மன்மோகன் சிங் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மன்மோகம் சிங்குக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
Popular Categories