கொட்டும் பனியில் கிராமத்தினர் கூடி நின்று, குடியரசு தினமான இன்று தேசிய கீதம் இசைத்தனர்.
காஷ்மீரின் குப்வாராவில் கிராமத்தினர் இன்று குடியரசு தின விழாவை கொண்டாட கூடி விட்டனர். தேசியக் கொடியான மூவர்ணக் கொடியுடன் மகிழ்ச்சி பொங்கக் கூடிய கிராமத்தினர், இராணுவத்தினருடன் இணைந்து குடியரசு தின விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த வீடியோ தற்போது சமூகத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேசிய கீதம் இசைத்த போது, அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று, தேசிய கீதம் இசைத்து கைத்தட்டி மகிழ்ந்தனர். நாம் எழுந்து நிற்கலாமா, பாடலாமா என்றெல்லாம் யோசிக்காமல், அனைவரும் தேசிய கீதம் பாடி மகிழ்ந்தனர்.