15 வயது சிறுவன் ஒருவனுக்கு அவருடைய ஆசிரியை டியூஷன் சொல்லிக்கொடுக்க சென்ற இடத்தில் நடந்த சம்பவம் அந்த குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் என்ற பகுதியில் 36 வயது டீச்சர் ஒருவர் மாணவன் ஒருவனுக்கு தினசரி அவருடைய வீட்டுக்குச் சென்று பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார்
இந்த நிலையில் மாணவனையும் அவரது தாயாரையும் கவனத்தை திசை திருப்பி டீச்சர் அங்கிருந்த பெட்ரூமில் இருந்த ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் விலை உயர்ந்த மொபைல் போனை திருடிச் சென்றதாக தெரிகிறது
டியூசன் டீச்சர் சென்றவுடன் நகைகளை காணாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவனின் தாயார் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.
காவல்துறை அந்த டீச்சரிடம் விசாரித்தபோது அவர் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது இதனையடுத்து டியூஷன் டீச்சரை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகின்றனர்