பகலில் காரில் உலா வருவது… இரவில் கொள்ளையடிப்பது… என்று ஹைதராபாத் நகரத்தில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்து, 72 சவரன் தங்கம், கார், 2 டிவிகள், 4 லட்சம் பணம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
ராச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ்பகவத் வெள்ளிக்கிழமை நாகோலில் உள்ள கேம்ப் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்ததாவது….
ஆந்திர பிரதேசத்திலுள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த போலகீ அப்பல நாயுடு (41), ராஜேந்திரா நகரில் உள்ள கிஸ்மத்பூரில் வசித்து வருகிறான். டிரைவராக பணிபுரிந்து வரும் அவன் பகல் வேளையில் காரில் சுற்றிய படியே காலனிகளை நோட்டமிட்டுக் கொண்டு இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்தான்.
1999- 2012 நடுவில் ஹைதராபாத் கமிஷனரேட் எல்லையில் 18 இடங்களோடு கூட ராச்சகொண்டா கமிஷனரேட்டை சேர்ந்த சைதன்யபுரி டாணா எல்லைகளிலும் திருட்டு குற்றம் செய்து சிறைக்கு சென்று வந்துள்ளான் அதன்பின் 2019 ல் இருந்து 2020 மார்ச் வரை மீர்பேட்டைச் சேர்ந்த காவல்நிலைய எல்லையில் 24 தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு உள்ளான். எல்பிநகர் டாணா எல்லையிலும் குற்றம் புரிந்துள்ளான். க
ுற்றவாளியை தொழில்நுட்ப உதவியோடு கைது செய்த போலீசார் அவனிடமிருந்த செல்வத்தை கைப்பற்றியுள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு ரிமாண்டுக்கு அனுப்புவார்கள்.
குற்றவாளியின் குற்றங்களை கட்டுப்படுத்திய போலீசாருக்கு காவல் ஆணையர் பணம் அன்பளிப்பு அளித்து உற்சாகம் அளித்துள்ளார். கூட்டத்தில் எல்பிநகர் டிசிபி சன்ப்ரீத்சிங், வனஸ்தலிபுரம் ஏசிபி ஜெயராம், மீர்பேட் போலீஸ் அதிகாரிகள் பங்கு பெற்றார்கள்.