2018ல் ஆக்கிரமிக்கப்பட்ட கஷ்மீரத்தில் உள்ள பாகிஸ்தானின் கைப்பாவை அரசு விரைவில் தேர்தல் நடத்த சட்டம் போட்டது. அதை ஆய்வு செய்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் வரும் செப்டம்பரில் அங்கே தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டது.
நம் வெளியுறவுத் துறையில் இருந்து பாக் தூதரக முக்கியப்புள்ளியைக் கூப்பிட்டு “எவன் நாட்டுக்கு எவன் தேர்தல் நடத்தறது? எங்க இடத்தை ஆக்கிரமிச்சிருக்கீங்க. மரியாதையா வெளியேற வழி பாருங்க. எங்க ஊருக்கு நாங்க தேர்தல் நடத்திக்கிறோம். எப்போ காலி பண்றீங்கன்னு சீக்கிரம் சொல்லுங்க.” என்று டோஸ் விடாத குறையாக பேசியிருக்கிறார்கள்.
“பேச்சா? தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கியிருக்க வேண்டாமா?” என்று கூவும் ஆட்கள் கொஞ்சம் அடங்குக. இதுவரை நம் வசமிருக்கும் கஷ்மீரத்துக்கே அவங்க ஆட்களிடம் பர்மிஷன் வாங்கினால்தான் போகமுடியும் என்றிருந்தது நிலை.
இப்போது அவனிடம் காந்திகளின் தாத்தா நேரு ஐநா சபைக்குப் போய் தாரை வார்த்த இடத்தை “மரியாதையா காலி பண்ணு மேன்” என்று சொல்கிறோம். இதுவரை வெளியுறவு அமைச்சகம் இப்படி அதிரடி காட்டியதில்லை.
- அருண்பிரபு ஹரிஹரன்