சாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில், 14 வயது சிறுமி சமீபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அதற்கடுத்த நாள், 51 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்தச் சிறுமியின் உடலை வெளியே எடுத்து, உடலுறவு கொள்ள முயற்சித்தார். இதைப் பார்த்த பொதுமக்கள், அந்த நபரைப் பிடித்து, போலீசிடம் ஒப்படைத்தனர்.
சிறுமியின் உடல், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ‘அந்த நபர், மனநிலை பாதிக்கப்பட்டவர் போலில்லை; ‘சைக்கோ’வாக இருக்கலாம்’ என, போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், அந்த சிறுமியின் மரணத்துக்கு, இந்த நபர் பாலியல் தொந்தரவு கொடுத்தது காரணமாக இருக்கலாமா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.