- இரு சுவர்களுக்கு இடையில் சிறிய சந்தில் சிக்கிய சிறுவன்.
- பாதுகாப்பாக வெளியில் எடுத்த போலீசார்.
மாடிமேல் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறிப்போய் இரண்டு வீடுகளுக்கு இடையில் இருந்த சிறிய சந்தில் விழுந்துவிட்டான். அவனை போலீசார் காப்பாற்றினார்.
விஜயவாடா நகரம் பவானீபுரம் லேபர்காலனியைச் சேர்ந்த சாட்ரகட்டா சோமய்யாவின் மகன் நிரஞ்சன் என்ற 6 வயது சிறுவன் தன் நண்பர்களோடு சேர்ந்து சனிக்கிழமை மாடிமேல் விளையாடிக்கொண்டிருந்தான். தவறிப்போய் இரண்டு வீடுகளின் இடையில் உள்ள சிறிய சந்தில் நிரஞ்சன் விழுந்துவிட்டான். மூச்சுவிட முடியாமல் திணறினான்.
விஷயம் தெரிந்த பெற்றோர் செய்வதறியாது கலங்கினர்.
உடனே போலீஸாருக்கு செய்தி தெரிவித்தனர். பவானிபுரம் ஸ்டேஷன் போலீசார் வந்து சிறுவன் விழுந்த இடத்தில் வீட்டுச் சுவரில் ஜாக்கிரதையாக உடைத்து துளையிட்டு ஒரு மணிநேரத்தில் பையனை பாதுகாப்பாக வெளியில் எடுத்தார்கள்.
இதற்கான முயற்சியில் ஈடுபட்ட எஸ்ஐ கவிதா, ஹெட் கான்ஸ்டபிள் ஸ்ரீனிவாசராவ், கான்ஸ்டபிள்கள் பவன், சலபதி ஆகியோரை உள்ளூர்வாசிகள் பாராட்டினார் கள்.
உடனுக்குடன் விரைந்து வந்து சாதுர்யமாக பணியாற்றி சிறுவன் உயியைக் காத்த போலீசாரை பெற்றோர் கைகூப்பி வணங்கினர்.
இந்த வீடியோவைப் பார்த்தால் எத்தனை ஆபத்தான விபத்தை எத்தனை சாமர்த்தியமாக கையாண்டார்கள் என்பது விளங்கும்.