ஆடையில்லாமல் வீடியோ கால் செய்து நர்சுக்கு அனுப்பி ஹைதராபாதில் நிகழ்ந்த கொடூரம் .
ஹெல்த்கேர் அமைப்பில் வார்டு பாயாக பணிபுரியும் இளைஞன், ஒரு நர்ஸ் மீது கண் வைத்தான். அவருடைய போன் நம்பரை எடுத்துக்கொண்டு ஆடையில்லாமல் நிர்வாணமாக- வீடியோ கால் செய்தான். பிறகு என்னாயிற்று…?
நிர்வாண வீடியோ கால் செய்து நர்சிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டான். நியூடு வீடியோ அனுப்பி உடையின்றி இருக்கும் தன்னைப் பார்த்தபடி அவர் வீடியோ கால் பேசுவது போல சோசியல் மீடியாவில் பிரச்சாரம் செய்து அவரை மிரட்டி அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கினான்.
அந்த நர்சின் பெயரில் பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஓபன் செய்து ஆண்களுக்கு பிரெண்ட்ஸ் ரெக்வஸ்ட் அழைப்பு விடுத்தான்.
அவனுடைய வன்முறைகளை கண்டு எரிச்சலடைந்த அந்தப்பெண் இறுதியில் ஷீ டீமுக்கு செய்தி தெரிவித்தார். இந்தச் சம்பவம் தெலங்காணா வாரங்கலில் நடந்தது.
நர்சுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய இந்த இளைஞனின் மொபைல் நம்பர் ஆதாரமாக போலீசார் களத்தில் இறங்கினர். அவனுடைய போன் நம்பர் மூலமாக லொகேஷன் பார்த்து இளைஞனை அடையாளம் கண்டு ஹைதராபாத்தைச் சேர்ந்த பர்ஷா அகில் என்று கண்டறிந்தார்கள்.
அவன் ஒரு ஹோம் கேர் அமைப்பில் வார்டு பாயாக பணிபுரிகிறான். பணியின் ஒரு பகுதியாக, அடிக்கடி நர்சுகளை சந்திக்க வேண்டி வரும். அவர்களுடைய போன் நம்பரை எடுத்துக் கொள்வது அவன் வழக்கம். அவ்வாறு மற்றுமொரு ஹோம் கேரில் பணி செய்யும் நர்ஸ் மீது அவன் பார்வை விழுந்தது.
அண்மையில் அந்த இளம் செவிலியர் ஒரு வீட்டிற்குச் சென்று மருத்துவ சேவைகள் அளித்தார். அந்த சமயத்தில் அவருடைய போன் நம்பரை எடுத்துக்கொண்ட அகில், அவருக்கு போன் செய்து தொல்லை செய்ய ஆரம்பித்தான்.
ஒரு நாள் அவருடைய போனுக்கு, ‘சில நேரம் கழித்து ஒரு சர்ப்ரைஸ் பார்க்கப் போகிறீர்கள்’ என்று மெசேஜ் கொடுத்தான். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. மீண்டும் மீண்டும் போன் செய்தான். அவர் போனை எடுக்கவில்லை. அதனால் வீடியோ கால் செய்தான். வீடியோ காலை எடுத்து பார்த்த அந்த இளம்பெண் ஒரேயடியாக அதிர்ச்சி அடைந்தாள்.
உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் நிர்வாணமாக அவருக்கு போன் செய்தான். அதைப் பார்த்து வெறுப்படைந்து போன நர்ஸ் போன் காலை கட் செய்தார்.
ஆனால் அதே நேரம், அந்த வீடியோ காலை ஸ்க்ரீன் ஷாட் ரெக்கார்ட் செய்த அந்த இளைஞன், அவர் தன்னோடு நிர்வாண வீடியோ கால் பேசுவதாக சித்திரித்தான்.
நிர்வாணமாக உள்ள தன்னோடு செல்போனில் உரையாடுகிறார் என்று சொல்லி சோஷியல் மீடியாவில் பிரச்சாரம் செய்வேன் என்று அச்சுறுத்தல் செய்ய ஆரம்பித்தான். அவனுடைய தொல்லை தாங்காமல் ஷீ டீமுக்கு மெசேஜ் அனுப்பினார் அந்த அர்ஸ். உடனே களத்தில் இறங்கி ஷீ டீம் குற்றவாளியை அரஸ்ட் செய்தது செய்தார்கள்!