June 16, 2025, 11:53 AM
32 C
Chennai

செம்மரம் வெட்டியதாக தமிழகத் தொழிலாளர்கள் 12 பேர் ஆந்திராவில் சுட்டுக் கொலை

திருப்பதி: செம்மரம் வெட்டியதாக தமிழகத் தொழிலாளர்கள் 12 பேர் உள்பட 20 பேர் ஆந்திராவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. தமிழக – ஆந்திர எல்லையில் செம்மரங்கள் வெட்டிக் கடத்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், செம்மரக் கடத்தல் முயற்சியில் ஈடுபட்டபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் எனக் கூறப்படுகிறது. இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டிக் கடத்தும் கும்பலுக்கும், ஆந்திர வனத்துறை, போலீசாருக்கும் இடையே அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் ஏற்படுவதுண்டு. ஆனால், இந்த மோதல் இன்று உச்சக் கட்டத்துக்குச் சென்றுள்ளது. தமிழகத்தின் எல்லைப் பகுதியான ஈசகுண்டா, சீனிவாசமங்காபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் செம்மரங்களை வெட்டிக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஆந்திர போலீசாருக்குத் தகவல் கிடைத்ததது. இதை அடுத்து போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கே கடத்தல் கும்பலை போலீசார் எச்சரித்துப் பிடிக்கச் சென்றபோது இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பலர் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

Topics

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

பஞ்சாங்கம் ஜூன் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

Entertainment News

Popular Categories