Home இந்தியா சூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக… விஜயவாடா!

சூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக… விஜயவாடா!

vijayawada solar energy
vijayawada solar energy

சூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக மாற்றுவதற்கு மத்திய அரசு விஜயவாடாவை தேர்ந்தெடுத்துள்ளது.

ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான மின்சாரத்திற்காக ஏற்பாடு செய்யும் சூரிய பலகைகளின் மீது 40 சதவிகிதம் தள்ளுபடி அளிக்க உள்ளது. நகரிலுள்ள வணிக வளாகங்களுக்கும் சூரிய பலகைகள் ஏற்பாடு செய்து கொள்ள சலுகை அளிக்கப் போகிறது.

இது வெற்றிகரமாக நடந்தேறினால் படிப்படியாக மீதி உள்ள நகரங்களுக்கும் விஸ்தரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நகரத்தில் இரண்டு மூன்று கிலோ வாட்கள் பயன்படுத்தும் கனெக்ஷன்கள் அதிகமாக உள்ளன. ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சூரிய பலகைகளின் ஏற்பாடுகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

இதன்படி ரூபாய் 80 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை செலவு செய்தால் வீட்டுக்கு தேவையான மின்சாரம் கிடைக்கிறது. இதில் 40 சதவீதத்தை மத்திய அரசு தள்ளுபடியாக கொடுக்கிறது. அதாவது கிலோ வாட்டுக்கு 16 ஆயிரம் ரூபாய் சலுகை கிடைக்கிறது.

solar energy

தற்போது வீட்டு பயன்பாட்டாளர்களுக்கு இத்திட்டம் அமுலில் உள்ளது. சூரிய சக்தி நகர ப்ராஜெக்டில் ஒரு பகுதியாக வணிக வளாகங்களுக்கும் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. வணிக வளாகங்களுக்கு எத்தனை தள்ளுபடி அளிக்க வேண்டும் என்பது பற்றி இன்னும் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டி உள்ளது.

பயன்பாட்டாளர்களுக்கு தரமான குறைந்த விலை மின்சாரம் கிடைக்கும்படி ஒரு புதிய திட்டத்தை ஏற்படுத்தி வருவதாக மாநில மின்சாரத்துறை ஞாயிறன்று ஒரு அறிவிப்பில் தெரிவித்தது. இதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் இலக்கு, தேவையான நிதி தொடர்பாக ஒரு திட்டத்தை தயாரித்து உள்ளதாக குறிப்பிட்டு உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version