இளைஞர் ஒருவர் குறித்து அவதூறான செய்தியை வாட்ஸ் அப்பில் உலவவிட்ட பெண்ணுக்கு சவுதியில் 70 சவுக்கடி தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், ‘வாட்ஸ் அப்’பில் இளைஞர் ஒருவர் குறித்து அவதூறாக செய்தி பரப்பினார். இது குறித்து அந்த இளைஞர் போலீசில் புகார் அளித்தார். சவுதி அரேபிய சட்டப்படி தொழில்நுட்ப கருவிகள் மூலம் அடுத்தவர்களை அவமதிப்பதும் துன்புறுத்துவதும் குற்றம் என்பதால்,அந்தப் பெண் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்தப் பெண்ணுக்கு ரூ.3,28,000 அபராதம் விதித்தது. அதற்கு அந்த இளைஞர் ஒப்புக் கொள்ளவில்லை. அந்தப் பெண் பரப்பிய அவதூறு மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால், கடுமையாக தண்டிக்க வேண்டும் எனக் கோரினார். இதை அடுத்து, அந்தப் பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Popular Categories