இந்தியாவில் டிக்-டாக் நிறுவனம் நல்ல வரவேற்பை பெற்றது. வெட்டியாக பொழுது போக்கும் நபர்கள் அதிகம் இருப்பதால் டிக் டாக் வெற்றி கண்டதாக பல வல்லுநர்கள் கூறியுள்ளார்.
டிக் டாக் தடை செய்யப்பட்டதால் அந்த இடத்தை நிரப்ப facebook நிறுவனம் களமிறங்கியுள்ளது. Reels இந்த செயலியில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் வைத்துள்ளவர்கள் சுவாரஸ்யமான வீடியோ பதிவு செய்தால் அதற்கு ஏற்ப பணம் அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது
புதிய ஸ்டார்கள் மற்றும் படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கத்தில் இந்த பணம் கொடுக்கப்படும் என்றும் சுவராசியமான வீடியோக்களை வெளியிட்டால், அந்த வீடியோவுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு ஏற்ற வகையில் வருமானம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. டிக்டாக்கில் பிரபலமாக இருந்த பலர் இந்த வாய்ப்பை பயன்படுத்த ரீல்ஸ் செயலில் தங்களுடைய வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சமுதாயத்தில் பொழுதுபோக்காக வந்தது இப்போது வேலை வாய்ப்பு போல் ஆகிவிட்டது.