ரே பரேலி: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இன்று காலை நிகழ்ந்த ரயில் விபத்தில் 30 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. டேராடூனில் இருந்து வாராணசி சென்ற ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலி அருகே வச்ரவானில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பச்ரவாண் ரயில் நிலையம் அருகே சிக்னலை மீறிச் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிகிறது. இதில், பயணிகள் ரயிலின் எஞ்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. இதில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 150 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரு.50 ஆயிரம் நிவாரணமும் லேசாகக் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அருகில் இருந்த கிராமங்களில் இருந்து பொதுமக்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
Popular Categories