புது தில்லி: திமுகவில் இருந்து விலகி, சோனியாகாந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு இப்போது காங்கிரஸ் கட்சியில் புதிய பதவி கிடைத்துள்ளது. இவருக்கு கட்சியில் என்ன பதவி என்று இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தநிலையில் இன்று கட்சியின் தலைவர் சோனியாகாந்தி, குஷ்புவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமத்துள்ளார். குஷ்பு உள்ளிட்ட 17 பேரை செய்தித் தொடர்பாளராக நியமித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா இன்று அறிவிப்பு வெளியிட்டார். காங்கிரஸ் கட்சியில் 4 மூத்த செய்தித் தொடர்பாளர்கள், 17 புதிய செய்தி தொடர்பாளர்கள், 31 மீடியா விவாதங்களில் பங்கேற்கும் நபர்கள் மற்றும் இரண்டு மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் என நியமிக்கப்பட்டுள்ளனர். அஜய் மக்கான், சி பி ஜோஷி, சத்யவ்ரத் சதுர்வேதி, ஷகில் அகமது ஆகியோர் மூத்த செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி உள்ளிட்ட 31 பேர் டிவி விவாதங்களில் பங்கேற்கும் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனார் குஷ்பு: சோனியா அறிவிப்பு
Popular Categories