பனாஜி, தெற்கு கோவா கடல் பகுதியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று புதன்கிழமை இன்று காலை விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த 2 விமானிகள் மாயமாகியுள்ளனர். கோவாவின் கர்வார் பகுதியில் 10 மைல் தொலைவில் தாழப் பறந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இந்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 3 பேர் இருந்தனர். அதில் இருந்த கமாண்டர் ஜோஷி, அங்கிருந்த மீனவர்களால் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு பேரைக் காணவில்லை. மாயமான கடற்படை அதிகாரிகளின் நிலை குறித்து தகவல் இல்லை. அவகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 6-க்கும் மேற்பட்ட கப்பல் மற்றும் விமானப்படை விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
Popular Categories