April 19, 2025, 4:56 AM
29.2 C
Chennai

பஞ்சாப்ப் ஜனவரி 5ல் பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு உண்மைதான்..

பஞ்சாப்பில் கடந்த ஜனவரி 5ம் தேதி பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது உண்மைதான் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் கடந்த ஜனவரி 5ல் நாட்களுக்கு முன் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பதிண்டா விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி காரில் சென்றார். அப்போது பயண வழியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அவரால் பயணத்தைத் தொடர முடியவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அவர் டெல்லி திரும்பினார். பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒன்றிய உள்துறை அமைச்சகமும், மாநில அரசும் தனித்தனியாக குழுக்களை அமைத்து விசாரணையை தொடங்கின. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கக் கோரி ‘லாயர்ஸ் வாய்ஸ்’ என்ற அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றம் நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

ALSO READ:  IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

இந்த குழுவில் பஞ்சாப் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர், பஞ்சாப் டிஜிபி, சண்டிகர் டிஜிபி மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

முழு விசாரணை அறிக்கையும் பிரமாண பத்திரமாக இந்த குழு நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். அதுவரை ஒன்றிய, மாநில அரசுகள் முன்னதாக நியமித்த குழுக்கள் தங்களது விசாரணையை மேற்கொள்ள கூடாது. இதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 5ல் மோசமான வானிலையால் பிரதமர் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து விட்டு சாலை மார்க்கமாக சென்றார். பயணத்தின் போது சில போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டதால் அவர் 20 நிமிடம் காரிலேயே காத்திருக்க நேர்ந்தது. பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது உண்மைதான். பெரோஸ்பூர் காவல் உதவி கண்காணிப்பாளர் தனது பணியை சரியாகச் செய்யவில்லை. சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரிக்கவில்லை என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  மகா சிவராத்திரி; இன்று நிறைவு பெறும் மகா கும்பமேளா! 63 கோடி பேருக்கு மேல் புனித நீராடல்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

Topics

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

Entertainment News

Popular Categories