02-06-2023 11:47 AM
More

    AI as my Member of Parliament

    Sare Jahan Se Accha

    Shut up. Shall We?

    Homeஇந்தியாயானையின் அட்டகாசம்-12 நாட்களில் 16 பேரை கொன்றது..
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    யானையின் அட்டகாசம்-12 நாட்களில் 16 பேரை கொன்றது..

    ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி மற்றும் அதை சுற்றியுள்ள 4 மாவட்ட பகுதிகளில் ஒரு காட்டு யானை அட்டகாசம் செய்து கடந்த சில நாட்களில் மட்டும் 16பேரைகொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி மற்றும் அதை சுற்றியுள்ள 4 மாவட்ட பகுதிகளில் ஒரு காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது.

    கடந்த 12 நாட்களில் ஹசாரிபாக், ராம்கர், சத்ரா, லோகர்தகா மற்றும் ராஞ்சி மாவட்ட பகுதிகளில் 16 பேர் அந்த யானையின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். ராஞ்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறும்போது, ராஞ்சி மண்டல வனப்பகுதியில் 5 பேர் யானை தாக்கி இறந்துள்ளனர்.

    அண்மையில் யானையை கண்ட கிராம மக்கள் சிலர் அதை சூழ்ந்து வேடிக்கை பார்த்தபோது அவர்களை யானை துரத்தி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    யானைகளை யாரும் நெருங்க வேண்டாம், காலை மற்றும் மாலை வேளையில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையை பின்பற்றாததாலும் இதுபோன்ற உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளன.

    பல்வேறு இடங்களிலும் நடந்த தாக்குதலில் ஈடுபட்டது ஒரே யானை போல தெரிகிறது. இருந்தாலும் அதை உறுதிப்படுத்த ஆய்வுகள் செய்து வருகிறோம். யானையை கட்டுப்படுத்த மேற்கு வங்காளத்தில் இருந்து நிபுணர் குழு அழைக்கப்பட்டு உள்ளது என்றனர்.

    கடந்த 2021-22-ம் ஆண்டில் ஜார்கண்டில் யானை தாக்கி 133 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    twenty − 4 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Follow us on Social Media

    19,023FansLike
    389FollowersFollow
    84FollowersFollow
    0FollowersFollow
    4,766FollowersFollow
    17,300SubscribersSubscribe

    ஆன்மிக