- Ads -
Home இந்தியா டிச.1 முதல் சிம் கார்டு வாங்குவது அவ்ளோ ஈஸி கிடையாது!

டிச.1 முதல் சிம் கார்டு வாங்குவது அவ்ளோ ஈஸி கிடையாது!

இந்த விதிமுறைகள் டிச.1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 1 முதல் மாறப்போகும் சிம் கார்டு ரூல்ஸ்!

அண்மைக் காலமாகவே நாடு முழுவதும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி மோசடி செய்வது, போலியான சிம் கார்டுகளை வழங்குவது, அதன் மூலம் பண மோசடி செய்வது போன்ற குற்றங்கள் தொடர் கடையாகி வருகின்றன.

இந்த மோசடிகளை தடுக்கும் வகையில், மத்திய அரசு பல விதிமுறைகளை கொண்டு வந்ததோடு, மொபைல் சிம் கார்டுகளை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள 67,000 டீலர்களை அரசாங்கம் தடைப் பட்டியலில் சேர்த்துள்ளது.

மேலும், மோசடியாகப் பெறப்பட்ட 52 லட்சம் சிம் கார்டு இணைப்புகளை அரசாங்கம் கண்டறிந்து செயலிழக்கச் செய்தது. கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம் முதல் 300 சிம் கார்டு டீலர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  சமூகநீதி பேசும் மூன்றாம் சக்தி தலித் சமூகத்தில் சண்டையை ஏற்படுத்தி வருகிறது: ஆளுநர் ரவி!

மோசடிகளைத் தடுக்கும் வகையில் பல சிம் கார்டுகளை வாங்குவதற்கு விதிமுறைகளை கடினமாக்கி உள்ளது.

அதிகரித்து வரும் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டிச.1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது.

காவல்துறை சரிபார்ப்பு மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கு பிறகே விற்பனையாளர்களுக்கு நிறுவனங்கள் சிம் கார்டுகளை விநியோகம் செய்ய வேண்டும்.

இந்த விதியை மீறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

ஏற்கெனவே உள்ள எண்ணில் புதிய சிம் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது வாடிக்கையாளர்களின் ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்படும்.

மொபைல் எண்ணின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், 90 நாட்கள் முடியும் வரை வேறு எந்த புதிய வாடிக்கையாளருக்கும் அந்த எண்ணில் சிம்கார்டை ஒதுக்கப்படக் கூடாது.

தனிநபர்கள் வணிக இணைப்பு மூலம் மட்டுமே மொத்தமாக சிம் கார்டுகளை பெற முடியும்.

புதிதாக சிம் கார்டு வாங்கும் நபரின் கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்பட வேண்டியது அவசியம். இதன் மூலம் தனிநபர்கள் ஒன்பது சிம்கள் வரை வாங்கலாம். ஆனால், மெத்தமாக சிம் கார்டுகளை வாங்க முடியாது.

ALSO READ:  சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

தொழில் நிறுவனங்களின் கேஒய்சி மற்றும் சிம் வாங்கும் தனிநபரின் கேஒய்சியும் சரிபார்ப்பு செய்யப்படும்.

புதிய விதிகளுக்கு இணங்க சிம் கார்டு விற்பனையாளர்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதோடு இல்லாமல் சிறைக்கு செல்லவும் கூடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விதிமுறைகள் டிச.1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version