January 25, 2025, 2:21 AM
24.9 C
Chennai

உ.பி., பீகாரில் இன்று இடைத்தேர்தல்! வருங்கால கூட்டணியை முடிவு செய்யும்?!

புது தில்லி:

உத்தரப் பிரதேசம் மற்றும் பீஹாரில்  மூன்று மக்களவை மற்றும் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் இன்று நடக்கின்றன. இந்தத் தேர்தல்கள் மூலம் மாநிலத்தில் மாறிய  கூட்டணிக்கு மக்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பது தெளிவாகும்.

உ.பி.யில் கோராக்பூர், பஹல்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மௌரியா ஆகியோர் முதல்வர் மற்றும் துணை முதல்வராகப் பொறுப்பேற்றனர். எனவே இந்த இரு தொகுதிகளும் காலியாகின. இதை அடுத்து இந்த இரு மக்களவைத் தொகுதிகளுக்கும்  பீஹாரில் அரேரியா மக்களவைத் தொகுதிக்கும் என மூன்று மக்களவைத்  தொகுதிகளுக்கும்  இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

அடுத்து, பீஹாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் முதல்வர் நிதீஷின் கௌரவத்துக்கு  சவால் விடும்படியாக உள்ளது. காரணம், பீகாரில் ஆட்சியில் இருந்த நிதிஷ், ராஷ்ட்ரீய ஜனதாதள கூட்டணியை முறித்துவிட்டு ஒரே நாள் இரவில் பாஜக.,வுடன் கூட்டணி வைத்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார். இந்தக் கூட்டணியை மக்கள் ரசித்து விரும்பி ஏற்றுக் கொண்டார்களா என்பதை இந்த இடைத்தேர்தல் காட்டிக் கொடுத்துவிடும் என்று கூறுகிறார்கள் அரசியல் மட்டத்தில். எனவே இந்த மூன்று மக்களவை, இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

ALSO READ:  சபரிமலை மகரஜோதி; ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!