March 19, 2025, 12:45 AM
28.5 C
Chennai

தேர்தல் நேரத்தில் பாஜக.,வுக்கு அழுத்தம் கொடுக்கவே போராட்டம்; தமிழகம் செய்வது சரியல்ல: சீண்டும் சித்தராமையா

மைசூரு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது சரியில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். மைசூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.

மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, தமிழகத்தின் போராட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், கர்நாடக மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் முழு அடைப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இது சரியான அணுகுமுறை இல்லை.

காவிரி குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் ஒரு திட்டம் என்றுதான் குறிப்பிடப் பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சாதகமாக அது ஆணை பிறப்பிக்கவில்லை. காவிரி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களுக்கு இடையே தனது தீர்ப்புப்படி முறையாக நீரை பகிர்ந்து கொள்வதற்காக ஒரு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என்றுதான் அது தெரிவித்தது. ஆனால் தமிழகத்தின் இத்தகைய நெருக்கடிகளுக்கும், அழுத்தம் தரும் தந்திரத்துக்கும் இடம் கொடுக்காமல், உச்ச நீதிமன்றம் சரியான உத்தரவை பிறப்பிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று கூறினார்.

மேலும், காவிரியுடன் நின்றுவிடாமல், மேகதாது அணையைக் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார் சித்தராமையா.

தமிழகத்தில் காவிரிப் பிரச்னை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஒரே நாளில் என்று திட்டமிடாவிட்டாலும், ஏதோ ஒரு வகையில் அனைவருமே தனித்தனியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பும் பாஜக.,வையே சாரும் என்று பழியைப் போட்டு, மாநிலத்தில் அரசியல் செய்தார் சித்தராமையா. அடுத்து காவிரி விவகாரத்தில் மக்களைத் தூண்டிவிட்டு, தாம் மட்டுமே கர்நாடகத்தின் காவிரி பாதுகாவலன் என்று காட்டிக் கொள்ள பாஜக.,வை கட்டம் கட்டினார். இப்போது, தமிழக அரசியல் கட்சிகள், கர்நாடகத் தேர்தலை முன்னிட்டு பாஜக.,வுக்கு நெருக்கடி கொடுக்க இது போல் போராட்டங்களை நடத்துவதாக கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியான திமுக.,வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. காவிரிப் பிரச்னையில் கர்நாடக காங்கிரஸை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக., வெளியேற வேண்டும், கர்நாடகத்தில் உள்ள வர்த்தகத் தொடர்புகளை திமுக., விலக்கிக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பலமாக எதிரொலித்துள்ள நிலையில், சித்தராமையாவின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Topics

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

பஞ்சாங்கம் மார்ச் 17 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மார்ச்-16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories