January 20, 2025, 4:57 PM
28.2 C
Chennai

பழங்குடியினப் பெண்ணுக்கு காலணி வழங்கி, கீழே குனிந்து மாட்டியும் விட்ட மோடி!

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் இந்திய நலவாழ்வுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதல் நலவாழ்வு மையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது, பழங்குடியினப் பெண்களுக்கு காலணிகள் வழங்கும் விழாவில் வயதான பெண்மணிக்கு கீழே குனிந்து காலணிகளை மாட்டியும் விட்டார்.

மத்திய பட்ஜெட்டின் போது இந்திய நலவாழ்வுத் திட்டம் என்னும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் நலவாழ்வு மையங்கள் அமைப்பதும், 10கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஒரு குடும்பத்துக்கு 5லட்ச ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்குவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.

நடப்பு நிதியாண்டில் நலவாழ்வு மையங்கள் அமைக்க ஆயிரத்து இருநூறு கோடி ரூபாயும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்குப் பத்தாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாயும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் அமைக்கப்பட்ட முதல் நலவாழ்வு மையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

பழங்குடியினப் பெண்களுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தையும் தொடக்கி வைத்தார். அப்போது பெண் ஒருவருக்கு காலணிகளை மோடி வழங்கினார். கீழே குனிந்து, காலணிகளை அந்தப் பெண்மணிக்கு மாட்டி கொள்ள உதவி புரிந்தார்.

ALSO READ:  டோலி.. டோலி... முன்னாள் விவசாயிகளின் மறுபக்கம்!

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய நலவாழ்வுத் திட்டம் என்பது சேவைகளை அளிப்பது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பங்களிப்புடன் நலமான, திறமுள்ள, புதிய இந்தியாவை உருவாக்குவதாகும் எனத் தெரிவித்தார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...