ராகுல் காந்தி தம்மைக் கட்டிப்பிடிப்பதை பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது. ரஷ்யர்களும் கொரியர்களும் மற்றவர்க்ரள் மீது விஷ ஊசிகளை செலுத்த இந்த முறையைக் கடைப்பிடிப்பார்கள்.
ஆகவே பிரதமர் மோடி வெகு விரைவாக ஒரு மருத்துவமனைக்குச் சென்று சுனந்தா புஷ்கர் கையில் இருந்தது போல் தம் மீது ஏதாவது விஷ ஊசி செலுத்தப் பட்டிருக்கிறதா என்பதை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார் சுப்பிரமணிய சுவாமி.
Namo should not have allowed Buddhu to hug him. Russians and North Koreans use the embrace technique to stick a poised needle. I think Namo should immediately go for a medical check to see if he has any microscopic puncture like Sunanda had on her hand
— Subramanian Swamy (@Swamy39) July 21, 2018
தனது டிவிட்டர் பதிவில் சுவாமி தெரிவித்துள்ள இந்தக் கருத்தை இப்போது பலரும் விவாதித்து வருகிறார்கள். பொதுவாக பிரதமர் மோடி மற்றவருடன் கை குலுக்குவதையே தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர் பாதுகாப்புக் குழுவினர்.
அண்மையில் மகாராஷ்டிர போலீஸார், பிரதமர் மோடியின் உயிருக்கு பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பதாகவும், எனவே மோடி பாதுகாப்பு நடைமுறைகளை மீறி, மக்களுடன் சென்று பழகுகிறேன் என புரோட்டோகாலை மீறக் கூடாது என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில், சுப்பிரமணிய சுவாமியின் டிவிட்டர் பதிவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பலரும் சுவாமியின் டிவிட்டர் பதிவு குறித்து விவாதித்து வருகிறார்கள். ஏற்கெனவே மோடி வேறு, உங்களுக்கு பிரதமர் பதவியில் அமர்வதற்கு அப்படி என்ன அவசரம் என்று கேட்டதும் சேர்த்து இப்போது விவாதிக்கப் பட்டு வருகிறது.