பெங்களூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ். கடந்தாண்டு செப்டம்பர் 5ம் தேதி அவரது வீட்டிற்கு வெளியே மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டு சி.சி. டி.வி. கேமராவில் 3 கொலையாளிகளின் படங்கள் பதிவாகியிருந்தன, இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹுப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அமித் மற்றும் கணேஷ் ஆகிய இருவரை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர்.