25-03-2023 3:44 AM
More
    Homeஇந்தியா24 ஆண்டுகளுக்குப் பிறகு... கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்!

    To Read in other Indian Languages…

    24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்!

    krs dam - Dhinasari Tamil

    24 ஆண்டுகளுக்கு பிறகு கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப் பட்டுள்ளது

    கர்நாடகாவிலும் கேரளாவிலும் தொடர்ந்து கன‌ மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 1.75 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகத்தில் கடந்த மே மாத இறுதியில் இருந்து ஜூலை மாதம் வரை தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கன மழையால் ஆற்றின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் ஜூலை மாதமே நிரம்பி வழிந்தன.

    கர்நாடக அணைக‌ளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப் ப‌ட்டதால், மேட்டூர் அணை கடந்த மாதம் முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கன‌மழை பெய்து வருகிறது. இதே போல கேரள மாநிலம் வய நாட்டில் இரவு பகலாக பலத்த மழை பெய்து வருவதால் கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய‌ அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்த தால், நிகழாண்டில் இரண்டாம் முறையாக இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டின. காவிரி, கபினி ஆகிய இரு ஆறுகளிலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளும் நிரம்பி வழிகின்றன.

    இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் அனைத்து மதகுகள் வழியாகவும் நீரை வெளியேற்றி வருகின்றனர். காவிரி கரையோரமுள்ள 50-க்கும் மேற்பட்டுள்ள கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளதால் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கே.ஆர்.எஸ் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் தொடர்ந்து அதிகமாக வந்துகொண்டு உள்ளது. இன்று மாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 87,464 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது

    இதனால் 24 ஆண்டுகளுக்கு பிறகு கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது. அதே போல் கபினி அணையும் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் 40,380 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த இரு அணைகளில் இருந்தும் 1,40 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது.

    கே.ஆர்.எஸ் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால் தேசிய பேரிடர் மீட்புக் குழு உதவியை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    17 + sixteen =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,632FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...