புது தில்லி: பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்வது எங்கள் வரம்பில் இல்லை, இது அரசின் கொள்கை முடிவு. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கருத்து தெரிவித்தது நீதிமன்றம்.
பெட்ரோல் , டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வதாக புகார் தெரிவித்து, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு தாரர் வழக்கைப் பதிவு செய்தார்.
ஆனால் இந்த மனு மீது கருத்து தெரிவித்த நீதிமன்றம், பெட்ரோல் விலை நிர்ணயம் குறித்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி, குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது.