January 14, 2025, 6:34 PM
26.9 C
Chennai

தமிழகத்தில் 3 மாதத்துக்குள் லோக் ஆயுக்த அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: மூன்று மாதத்துக்குள் லோக் ஆயுக்தவை அமைப்பதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

லோக் ஆயுக்த நீதிமன்றங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப் பட்டிருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், லோக் ஆயுக்த நீதிமன்றங்கள் அமைக்கப் படவில்லை என்றும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப் பட்டது.

இந்த வழக்கில், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது மற்றும் அது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி எந்த தகவல்களையும் தமிழக அரசு இதுவரை அளிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசு, லோக் ஆயுக்த அமைப்பதில் அக்கறை காட்டவில்லையா? கால தாமதம் செய்வதைத்தான் அது விரும்புகிறதா? என கேள்வி எழுப்பியது.

மேலும், லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை இன்று மதியம் 2 மணிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், பிப்ரவரி மாதத்திற்குள் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என கூறியது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா!

இதைத் தொடர்ந்து அடுத்த 3 மாதத்திற்குள் லோக் ஆயுக்த அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முட்டாள்தனமான முதலாளித்துவம்!

இவ்விதம் நன்றி பாராட்டுவது நம் பாரம்பரியம். முதலாளிமார்களே, உங்களுக்குத் தொழிலாளிகளே அத்தகைய தெய்வம். அவர்களுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும்

பஞ்சாங்கம் ஜன.14- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பிரதமர், ஆளுநர் தமிழில் பொங்கல் வாழ்த்து!

பல தொழில் செய்து சுழலும் இவ்வுலகத்தில் ஏர்ப்பிடிக்கும் தொழிலை பின்பற்றி தான் உலகம் சுற்ற வேண்டியிருக்கிறது என்பது வள்ளுவன் வாக்கு.

தேவகோட்டை பள்ளியில் தேசிய இளைஞர் தினம் போட்டிகள்!

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழாவினையொட்டி நடைபெற்ற ஓவியம் வரைதல் மற்றும் விவேகானந்தரின்

மதுரை கோயில்களில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராசருக்கு சிறப்பு பூஜைகள் அதிகாலை நடைபெற்றது.