கேரளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு, தன் முழு அரசு இயந்திரத்தையும் பிரயோகித்து, சபரிமலை மீதான அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டும் விதமாக, பெண்கள் சுவர் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது.
காசர்கோடில் இருந்து பாறசாலை வரை சுமார் 640 கி.மி.. தொலைவுக்கு மகளிர் கைகோத்து நின்று அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் இந்த போராட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் கம்யுனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியப் பெண்கள் என பலரையும் கலந்து கொள்ள திரட்டியிருந்தது.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ள சிலர் ஹிந்து சமூகப் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக, கருப்புக் கூட்டுக்குள் சிறையிருந்தபடி சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் பாதுகாக்கப்பட்ட சிறுபான்மையின பெண்கள் அளித்த மாபெரும் ஆதரவை அரசு பயன்படுத்திக் கொண்டுள்ளது என்று நக்கல் அடித்துள்ளனர்.