புதுதில்லி : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மகரசங்கராந்தி, பொங்கல் பண்டிகை, மகுபிகு, உத்திராயன் கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவரவர் மொழிகளில் தனித்தனியாக வாழ்த்து பதிவிட்டுள்ளார்.
இவற்றில், தமிழில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பொங்கல் திருவிழா நன்னாளில், தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டு வர நான் பிரார்த்திக்கிறேன். தேசத்திற்கு உணவளிக்கக் கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கும் நாம் வணக்கம் செலுத்துகிறோம் உங்கள் நரேந்திர மோடி” என குறிப்பிட்டுள்ளார்.