சென்னை: மத்திய அரசு அறிவுறுத்தியபடி, இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், 2018-19ஆம் கல்வியாண்டு முதல் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும்.
5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை!
தனியார் பள்ளி 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50 கட்டணம், 8ஆம் வகுப்புக்கு ரூ.100 கட்டணம்!
5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும்
தேர்வுக்கு பின் வினாத்தாளை வட்டார வள மையங்களில் வைக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பலவும், இந்த பொதுத் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.