― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபாகிஸ்தானில் பதற்றம்! ராணுவ அதிகாரிகள் அவசர ஆலோசனை!

பாகிஸ்தானில் பதற்றம்! ராணுவ அதிகாரிகள் அவசர ஆலோசனை!

- Advertisement -
pakistan army chief meeting
File Picture; கோப்பு படம்!

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதில், ராணுவ அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

பாகிஸ்தானில் இன்று அதிகாலை பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதிகாலை 3.30க்கு பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய விமானப்படை விமானங்கள், பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ் இ மொஹம்மத் இஸ்லாமிய பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதிக்குள் சென்று இந்திய விமானப் படை இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் – இந்தியா எல்லையில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தானில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர், அமைச்சக அதிகாரிகள், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் தாக்குதலை அடுத்து அவசர ஆலோசனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

[videopress oyo82sE8]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version