Home இந்தியா ஆண்டவன் சந்நிதியில் அனைவரும் சமம்! நெகிழ வைத்த நிர்மலா சீதாராமன்!

ஆண்டவன் சந்நிதியில் அனைவரும் சமம்! நெகிழ வைத்த நிர்மலா சீதாராமன்!

பாரதத்தின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை நேற்று (மார்ச் 26) காலை உடுப்பியில் உள்ள ஸ்ரீகிருஷ்னர் மடத்துக்கு தரிசனத்துக்காக சென்றார்.

அங்கே ஸ்ரீகிருஷ்ண மடத்தில் ஆலயத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணரை தரிசித்தார். அவருடன் பாஜக வேட்பாளர் உடுப்பி சிக்கமகளூரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஷோபா கரண்டால்ஜே மற்றும் உடுப்பி சட்டமன்ற உறுப்பினர் கே ரகுபதி பட் மற்றும் கட்சியினர் சென்றிருந்தனர்!

பலிமாரு மடத்தின் தலைவர் பர்யாய சுவாமி வித்யா தீர்த்தர் அவர்களை வரவேற்று பகவத் பிரசாதம் வழங்கினார். அப்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுவாமியிடம் நாட்டுக்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்காகவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தாம் பிரார்த்தனை செய்து கொள்வதாகவும், அதற்கு ஆசி அளிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்

பிறகு நிர்மலா சீதாராமன் தனக்கும் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம், கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோயில் ஆகியவற்றுக்குமான பல வருட நெருங்கிய தொடர்பு குறித்து எடுத்துக் கூறினார்.

பின்னர் அவர் மணிபாலில் நடைபெறும் மீனவர்கள் உடனான கூட்டத்தில் கலந்து கொள்ள அங்கிருந்து சென்றார். பாஜக தொண்டர்களுடனும் நிர்வாகிகளுடனும் கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடினார்.

உடுப்பி தொகுதியிலிருந்து போட்டியிடும் ஷோபா கரண்டால்ஜே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது நிர்மலா சீதாராமன் உடனிருந்தார்!

உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தபோது நடந்த ஒரு சம்பவம் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது.

நிர்மலா சீதாராமன் வருவதை அறியாமல் இளைஞர் ஒருவர் பகவானை கண் மூடி அருகே நடப்பது கூட அறியாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிர்மலா சீதாராமனுடன் வந்த காவலர்களும் கோயில் அர்ச்சகரும், அந்த இளைஞரை அங்கிருந்து விலக்க விரைந்து சென்றனர்.

ஆனால் அவர்களைத் தடுத்த நிர்மலா சீதாராமன், அவர்களைத் தடுத்து நிறுத்தினார். பின்னர், அந்த இளைஞர் பிரார்த்தனை செய்து அங்கிருந்து அகலும் வரை ஓரிரு நிமிடங்கள் நிர்மலாவும், ஷோபா கராண்டால்ஜேவும் காத்திருந்தனர். அந்த இளைஞர் அங்கிருந்து நகர்ந்ததும், பின்னர் அவர்கள் சந்நிதி முன் நின்று வணங்கிச் சென்றனர்.

இது குறித்த வீடியோ இன்று இணையதளங்களில் வைரலானது. ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்று ஓர் இளைய பக்தருக்காக காத்திருந்த பாதுகாப்பு அமைச்சரின் எளிமையைக் கண்டு அங்கிருந்தவர்கள் வியந்தனர்.

[videopress IQfBBTjQ]

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version