Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img
spot_img

― Advertisement ―

Homeஇந்தியாமக்களவை தேர்தல் 2019 : முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல்...

மக்களவை தேர்தல் 2019 : முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்

- Advertisement -
- Advertisement -

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்னும் 3 தினங்களில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

17-வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 11-ம் தேதி வெளியிட்டது. அதன்படி முதற்கட்ட தேர்தல் ஆந்திரப்பிரதேசம் (25), அருணாச்சலப்பிரதேசம் (2), அசாம் (5), பீஹார் (4), சத்தீஸ்கர் (1), ஜம்மு  மற்றும் காஷ்மீர் (2), மஹாராஷ்ட்ரா (7), மணிப்பூர் (1), மேகாலயா (2), மிசோரம் (1), நாகலாந்து (1) ஒடிஷா (4), சிக்கிம் (1) , தெலங்கானா (17), திரிபுரா (1), உத்தரப்பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5) , மேற்கு வங்கம் (2) , அந்தமான் (1), லட்சத்தீவு (1)   உள்ளிட்ட 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது . மேலும் இதற்கான பிரச்சாரம் நாளை (09/04/2019) மாலை 5.00 மணியுடன் முடிவடைகிறது . இந்தியா முழுவதும் பதிவான வாக்குகள் மே – 23 தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியீடுகிறது தேர்தல் ஆணையம்.

இதனையொட்டி அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.

முதற்கட்ட தேர்தல் வரும் 11-ம் தேதி நடைபெற்றாலும் தபால் வாக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டன. அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள மலை கிராமமான லோகித்பூரில் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் தங்களது ஜனநாயக கடமையை வாக்குச்சீட்டு முறையில் கடந்த சனிக்கிழமையன்று செலுத்தினர்.

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. அதன்பிறகு, தேர்தல் தொடர்பான பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம், பேரணி நடத்த அனுமதி கிடையாது. மேலும், கைபேசி எஸ்.எம்.எஸ்., பேஸ்புக், டுவிட்டர், டி.வி., ரேடியோ, எப்.எம். போன்ற எலக்ட்ரானிக் பிரசாரங்களுக்கும் இன்று மாலை 6 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,023FansLike
389FollowersFollow
85FollowersFollow
0FollowersFollow
4,791FollowersFollow
17,300SubscribersSubscribe
Exit mobile version