அமேதி மக்களவைத் தொகுதியில் ஸ்மிருதி இராணி முன்னிலை பெற்று வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் பின்னடைவை சந்தித்து உள்ளார்
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில் இரண்டாவது முறையாக தற்போதைய தேர்தலில் நிறுத்தி இராணி ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 2014 மக்களவைத் தேர்தலில் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ராகுல் காந்தியுடன் ஒப்பிடும்போது ஒரு லட்சத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.
அதன் பின்னர் தொகுதிக்கு அடிக்கடி சென்று மக்களுடன் கலந்து பேசி தன் மீதான நம்பிக்கையை மக்களிடம் விதைத்தார். இந்நிலையில் இந்த தேர்தலில் தான் எப்படியும் வெற்றி பெறுவோம் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார் ஸ்மிருதி இரானி. காங்கிரஸ் அமேதி தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பதை ஆணித்தரமாக ஒவ்வொரு முறையும் மக்களிடம் எடுத்துக் கூறி வந்தார்
இந்நிலையில் அமேதி தொகுதியில் பாஜக கடுமையாக உழைத்தது. யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் அங்கே பிரச்சாரத்துக்காக சென்றனர்.
கடந்த 1977, 98 ஆகிய தேர்தல்களை தவிர மற்ற தேர்தல்களில் அமேதி தொகுதி காங்கிரஸ் வசமே இருந்து உள்ளது. இந்நிலையில் தற்போதைய தேர்தலில் ராகுல் பின்னடைவை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!
முன்னதாக, அமேதி தொகுதியில் தாம் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில், கேரளத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார் ராகுல். வயநாடு தொகுதியில் ராகுல் தற்போது முன்னிலை பெற்று வருகிறார்.