இவர் தான் பாஜக.,வின் புதிய எம்.பி., பிரதாப் சந்திர சாரங்கி! தற்போது, ஒடிஸாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக., எம்.பி.!
1955ல் ஜனவரி 4ம் தேதி மிக ஏழ்மையான பிராமணக் குடும்பத்தில் ஒடிஸாவின் பாலாசோர் நிலாகிர் அருகே கோபிநாத்புர் என்ற கிராமத்தில் பிறந்தவர். 1975ல் உத்கல் பல்கலையின் கீழுள்ள பகிர் மோகன் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர்.
சிறுவயதில் இருந்தே மிக எளிமையான ஆன்மிக வாழ்க்கை. ஆன்மிக எண்ணம் மேலோங்க, கோல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு அடிக்கடி சென்று வந்தார். அங்கே தாமும் ஒரு சந்யாசியாசியாக வேண்டும் என்ற தம் விருப்பத்தை அவர்களிடம் வெளிப்படுத்தினார்.
ஒருநாள் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து அழைப்பு வந்தது. ஓடோடிப் போய் விழுந்து வணங்கினார். இவரது பயோடேடாவை அலசினார்கள் மடத்தில். அதில் அவரது விதவைத் தாயார் இன்னமும் கவனிப்பதற்கு வேறு நபர் இன்றி வாழ்ந்து கொண்டிப்பது தெரிந்தது. அவர்கள், இவரது தாயாரை முதலில் நன்கு கவனித்துக் கொள்ளும் படி, திருப்பி அனுப்பினார்கள்.
கிராமத்துக்கு வந்தார். அதே எளிய ஆன்மிக வாழ்க்கை. தன் நேரத்தை சமுதாயப் பணிகளில் செலவிட்டார். கிராமத்து மக்களுக்கு தன் சேவைகளை அர்ப்பணித்தார்.
பழங்குடியின கிராமங்கள் நிறைந்த பாலாசோர் மற்றும் மாயுர்பஞ்ச் மாவட்டங்களில், கண சிக்ஷா மந்திர் யோஜனா என்ற திட்டத்தின்கீழ், சமர் கர கேந்த்ரா என்ற பெயர்களில் பள்ளிகள் பல தொடங்கி வைத்தார்.
பின்னாளில் பாஜக.,வில் இணைந்தார். 2004, 2009 இரு முறையும் ஒடிசா சட்டமன்றத்துக்கு தேர்வாகி எம்.எல்.ஏ.,வாக சேவை செய்தார். தொடர்ந்து கடந்த 2014 ஆம் வருடம் பாலாசோர் தொகுதியில் பாஜக., சார்பில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார்.
தொடர்ந்து, 2019 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். இம்முறை மக்கள் அவருக்கு அங்கீகாரம் அளித்தனர். அதே பாலாசோர் தொகுதி. பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த தற்போதைய எம்.பி., ரபீந்த்ர குமாரை 12,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குள் செல்கிறார்.
இவரை ஒரிசாவின் மோடி என அழைக்கிறார்கள்! காரணம் எளிய வாழ்க்கை! இந்த வயதிலும் எங்கும் சைக்கிள் பயணம். மண் சுவர் கொண்ட வீட்டில் இருந்து தில்லிக்கு பதவி ஏற்கச் செல்லும் மனிதர்.
பல கோடிகள் செலவு செய்தால் மட்டுமே தேர்தலில் நிற்பதற்கு சீட்டே வழங்கப் படும் என்ற நிலை இருக்கும் தமிழகம் எங்கே…! தெருக்கோடியில் இருந்தாலும் ஓர் ஏழை மனிதனை எம்.பி.யாக்கி அனுப்பி வைக்கும் ஒடிஸா எங்கே..?!
சாதாரண பெட்டி மற்றும் சில வேஷ்டிகளுடன் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளது பாஜக! குறிப்பாக, ஒடிஸாவின் அறிவும் உணர்வும் சேர்ந்த வாக்காளர்கள்!
பிரதாப் சந்திர சாரங்கி, தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில்… இருந்து!
Bharat is great .Land of rishis and Yogis. Except TN others are wise.