ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 227 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி வீரர் ரோகித் சர்மா 144 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ரோஹித் சதம் அடித்து சாதனை படைத்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் அடித்தார் ரோஹித் சர்மா. பும்ரா, சாஹலிம் அபாரப் பந்து வீச்சால் தென்னாப்பிரிக்கா வீரர்களின் விக்கெட்டுகள் மள மளவென சரிந்தன.
சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன், சேவாக் போன்ற மூத்த வீரர்களும் அமித்ஷா, ராஜ்நாத் சிங் போன்ற அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.