நாடு ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சந்திரயான்-2 பயணம் திடீரென ஒத்திவைக்கப் பட்டது. விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் சந்திரயான்-2 கவுன்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது.
க்ரையோஜினிக் எஞ்சினுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவுபெற்ற நிலையில், திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவப்படுதல் ஒத்திவைக்கப் படுவதாக கூறப்பட்டது.
சந்திரயான் 2-ஐ தாங்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 எம்.1 ராக்கெட் ஏவும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப் படுவதாகவும், சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்தது.
சந்திரயான் 2 தற்காலிக நிறுத்தம் குறித்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்ணில் ஏவும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக, இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ISRO: A technical snag was observed in launch vehicle system at T-56 minute. As a measure of abundant precaution, #Chandrayaan2 launch has been called off for today. Revised launch date will be announced later. pic.twitter.com/ev5FxB8WKw
— ANI (@ANI) July 14, 2019